சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

சனி, 31 ஜூலை, 2010

டௌ கெமிக்கல்ஸ்

டௌ கெமிக்கல்ஸ்














2001 -இல் இன்னொரு அமெரிக்க ரசாயனக் கம்பெனியான டௌ கெமிக்கல்ஸ் கார்பைடு கம்பனியை வாங்கிவிட்டது.  வியத்நாமில் மக்களை எரித்துக் கொள்வதற்கான நாபாம் என்ற பாஸ்பரஸ் குண்டுகளையும், காடுகளை எரித்துப் போட்டலாக்குவதர்கான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சு ரசாயனத்தையும் அமெரிக்கவுக்கு தயாரித்துக் கொடுத்தான், சதாம் உசேனுக்கு பேரழிவு ரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்ததும் டௌ கெமிக்கல்ஸ் என்ற இந்தக் கொலைக்கார நிறுவனம் தான்,  போபால் ஆலையில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்றிருக்கும் கொடிய ரசாயனக் கழிவுகளை அரசாங்கம் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று கூறுகிறது டௌ கெமிக்கல்ஸ். ரசாயன கழிவுகள் நிலத்தடி நீரில் இறங்கி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் பல புதிய நோய்களுக்கு ௨௬ ஆண்டுகளாகப் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, யூனியன் கார்பைடு நடத்தி வந்த மருத்துவமனைக்கும் தான் செலவு செய்ய முடியாது என்று கூறுகிறது டௌ.

ஒரு நிறுவனம் கை மாறும்போது, சொத்தும் கடனும் சேர்ந்துதான் கைமாறுகின்றன. வீட்டை வாங்கியவன் பழைய வீட்டு வரி பாக்கிக்கு நான் பொறுப்பில்லை என்று கூற முடியாது.  ஆனால் டௌ கெமிக்கல்ஸ் கூறுவதை ஏற்று அலையை சுத்தம் செய்வதற்கு, மருத்துவமனையை நடத்துவதற்கும் மன்மோகன் அரசு பொறுப்பேற்றுக் கொண்டு விட்டது இதற்கான செலவு சில நூறு கூடி ரூபாய்கள். அதுமட்டுமல்ல, போபால் தொடல்பான வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற்றுக் கொண்டால் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீடு செயத் தயார் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே டௌ கெமிக்கல்ஸ் பேரம் பேசியிருக்கிறது. இதற்க்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் மணி சிங்வி. இவர் தான் இன்று டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வழக்குரைஞர். வழக்கையெல்லாம் மூட்டை கட்டி விடலாம் என்று இரண்டு ஆண்டுகள்ளுக்கு முன்னரே அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.  ப.சிதம்பரம் அமல்நாத் ஆகிய அமைச்சர்கள், சென்ற ஆண்டு போபாளுக்குச் சென்ற மதிய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஆலையின் மண்ணை கையில் அள்ளி எடுத்து என்ன நடந்து விட்டது, நான் செத்தா பொய் விட்டேன் என்று பாதிக்கப்பட்ட மக்களை நக்கலடித்திருக்கிறார். போபால்கள் நடக்கலாம், அதற்காக நாடு முன்னேறாமல் இருக்க முடியாது என்று தன்னை சந்திக்க வந்த போபால் மக்களின் பிரதிநிதிகளிடம் கூறி இருக்கிறார் மன்மோஹன்சிங்.

இறந்துபோன பூபால் மக்களின் உடல்களில் சயனைட் உள்ளிட்ட 21 நச்சு ரசாயன பொருட்கள் இருந்தததாக சவப் பரிசோதனை அறிக்கை  கூறுகிறது. அந்த ஆலைக்குள் நடந்த ரகசிய சோதனை என்ன, என்பது இந்த வலக்கை விசாரித்த சி.பி.ஐக்கே தெரியாது.  நாடு ஊரில் நச்சு ஆலையை அமைக்க அனுமதி கொடுத்த இந்திராவின் அரசு முதல், ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக இருப்பதாக சான்றிதல் அளித்த தொழிற்சாலை இன்ஸ்பெக்டர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வரை யார் மீதும் வழக்கு இல்லை.விசாரணையும் இல்லை. மீண்டும் ஒரு போபால் போடுகோளை நடைபெறாமல் தடுக்கவும் மக்களைக் காப்பாற்றவும் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் மன்மோகன் அரசு கவலைப்படவில்லை.

மாறாக மீண்டும் ஒரு போபால் நடந்தால் நிவாரணம் கொடுக்காமல் குற்ற வழக்குகளில் சிக்காமல் அமெரிக்க முதலாளிகளைக் காப்பாற்றுவது எப்படி என்பது தான் இந்த அரசின் கவலையாக இருக்கிறது.  இந்திய அமெரிக்க அனுசக்க்தி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க கம்பெனிகளிடம் இந்திய அரசு வாங்கவிருக்கும் அணு உலைகளில் எந்திரக் கோளாறு காரணமாக விபத்து நடந்தாலும், அதற்க்கு அமெரிக்கக் கம்பெனிகளிடம் நட்ட ஈடு கேட்கவோ, வழக்கு தொடரவோ முடியாது என்று கூறும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாராக வைத்திருக்கிறார் மன்மோகன்சிங்.

நீதி!
போபால் தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இழைக்கப் பட்ட அநீதி என்று நாம் குமுறுகிறோம். அந்த அநீதிதான் இனி நீதி என்று ஆகிவிட்டது.  போபாலில் எதெல்லாம் சட்டமீறல் என்று கூறுகிறோமோ அவையே இப்போது சட்டங்கழகி வருகின்றன.  பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம் ஏழை நாட்டு மக்களைக் கொள்வது அவர்கள் உரிமை.  முதலாளிகள் கொழுப்பதே தோல் வளர்ச்சி என்று கூறும் கார்ப்பரேட் பங்கரவதத்தைத்தான்  காங்கிரசு, ப.ஜ.கா. தி.கு.கா அ.இ.அ.தி.மு.க போன்ற ஒட்டுக் கட்சிகளும் முன்மொழிகின்றன.
26 ஆண்டுகளுக்கு முன்  போபாளைப் பினக்காடாகிய நச்சுக்காற்று இன்று நாடெங்கும் சுழன்றடிக்கிறது.  விவசாயத்தை நாசமாக்கி விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது.  காடுகலைப் பிடுங்கிக் கொண்டு பழங்குடி மக்களை வேட்டையாடுபிறது.  மீனவர்களை கடலை விட்டும், பழங்குடி மக்களை காட்டைவிட்டும் , சிறுவணிகர்களை சில்லறை வணிகத்திளிருந்தும் துரத்துகிறது.  தொழிலாளிகளின் உரிமைகளை வெட்டிஎரிந்து அவர்களுடைய உழைப்பைப் பிழிந்து சக்கையாக்கி துப்புகிறது.  எல்லாத்தரப்பு மக்களின் மூச்சையும் நிறுத்துகின்ற இந்த நச்சுக்காற்று சயனைட் வாஉ அல்ல இந்தன் பெயர் மறு காலனியாக்கம்.

1 comments:

ஜோதிஜி சொன்னது…

நண்பரே புலவன் புலிகேசி உருவாக்கி உள்ள போபால் வலைதளத்தில் இதை வெளியிட அவரை அனுகவும்.

பின்னூட்டத்தை வார்த்தைகள் சோதிக்க என்பதை நீக்கவும்

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More