கடவுள் என்றால் என்ன என்றே தெரியாமல் பல கோடி பேர் இன்றளவும் பல கோவில்களுக்கும், பல பரதேசிகளிடமும் சென்று தனது பொன்னான வாழ்வு நேரத்தையும், செல்வங்களையும் வீணடித்து கொண்டிருக்கின்றனர். (எனது அம்மா உட்பட)
இன்றைக்கும் நாம் தெய்வங்கள் என்று கூருபவைகள் யாவும் பொய்யானதே. தெய்வம் என்பதே ஆதிகாலத்தில் நம் நாட்டில் (தமிழ் நாட்டில் ) இல்லை எனலாம். கி.மு 3 நூற்றாண்டில் இயற்ற்றப்பட்ட தொல்காப்பியம் தான் நமக்கு கிடைத்த முதுபெரும் தமிழ் நூலாகும்.
பழக்கங்கள் தான் வழக்கங்கலாயின. அதுபோல் தான் தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த இலக்கியங்களை ஆராய்ந்த பிணிபு தான் அவர் அந்த இலக்கண நூலினையே இயற்றினார். இதற்கு அவர் முன்னோர் கூறியது, என்பர். எனக் குறிப்பிடுவதே சான்றாகும்.
அப்படிப்பட்ட அந்த நூலில் "ஞாயிறு போற்றதும்" என்று கூறினாரே தவிர வேறு தெய்வங்களையோ அதன் பெயர்களையோ அவர் குறிப்பிடவில்லை. தமிழின் கடவுள் நூல் எனவும், உலக மக்கள் அனைவருக்கும் பொது நூலான திருக்குறளிலும்
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'
என்று குரிபிடுகிறாரே ஒழிய இன்ன கடவுள் என்று எதனையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆக கடவுள் என்பது ஒன்றே என இவ்விரண்டு நூல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்திற்கு நன்மை பயப்பவை இயற்கை மட்டுமே. எனவேதான் தொல்காப்பியம் இயற்றுவதற்கு கடவுள் வாழ்த்து பாடலாய் ஞாயிறு போற்றதும் என்று சூரியனை வணங்குகி எழுதுகிறார். தற்பொழுது வழங்கப்படும் தெய்வங்களும் அதன் கதைகளும் கதையும், கற்பனையும் மட்டுமே.
கடவுள் என்பது என்ன?
கடவுள் என்பது கட+வுள் தன்னுள் கடந்து செல்லும் நிலை. தன்னை புரிந்து கொள்வது. இயற்கை போன்று பிறர்க்காக வாழ்பவர்களே கடவுள் ஆவார். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.
சனி, 17 ஜூலை, 2010
கடவுள்


0 comments:
கருத்துரையிடுக