சங்க புலவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி இயற்கையை கூர்ந்து நோக்கி உணர்ந்து அழகிய காட்சியை பாடினார்கள்.
புலவர்கள் மானம் நிறைந்தவர்கள். வறுமையால் வாடிய நிலையிலும் பிறர்க்குத் தாழ்ந்து பணிந்து போக முடியாத பெருமித மனநிலை பெருஞ்சித்தனார் முதலான புலவர் பலருக்கு இருந்தது. அதனால் புலவர்கள் செல்வர்களின் முன்னே நின்று கெஞ்சி கேட்பதாகப் பாட்டுகள் இல்லை.
மொசீகரனார் என்ற புலவர் கொண்கானத்து தலைவனை அணுகி போருனுதவி கேட்டபோது, எனக்குப் பொருண் கொடு என்று இறந்து கேட்க என்னால் இயலாது. ஆனால் உன்னுடைய மலையைப் புகழ்ந்து படுவது எனக்கு விருப்பமான செயல் எளிமையான செயல் என்று கூறி அவன் மலையைப் பாடினார்.
ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு. காசுக்காக எதைவேண்டுமானாலும்
செய்யுமளவிற்கு மாறியுள்ளனர் இக்கால புலவர்கள் (சிலர் விதி விலக்காக உள்ளனர்)
முழுமதி இல்லாத நாடு இரவில் சென்று சிறுநீர் கழிக்கக் கூட வீரம் இல்லாதவர்களுக்கு "நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட' என்று பாடல் எழுதும் அளவிற்கு இன்றைய புலவர்கள் மானம் கெட்டுள்ளனர்.
சங்க காலத்தில் புலவர்கள் காதல், வீரம், கோடை முதலியவற்றை பற்றி கூறும்போது சற்று கற்பனையையும் கலந்து இயற்கையை உவமையாக கொண்டு பாடுவார். வீரத்தினையும் கொடையும் பற்றி பாடும் பொழுது உண்மையை மட்டுமே பாடியுள்ளனர்.
ஆனால் தற்பொழுது எழுதும் தனிமனித விமரிசனப் பாடல்கள் பொய்யும் புரட்டுகலுமே நிறைந்திருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'தமிழ் படம்' என்ற திரைப்படத்தின் முதல் பாடலே இதற்க்கு சான்று. இந்தப் பாடலைப் பார்த்த பிறகாவது தனக்கு இனிமேல் இது போல் பாடல்கள் எழுத வேண்டாம் என்று போல்வார்களா நடிகர்கள். அல்லது இனிமேல் என்னால் இதுபோல் எழுத முடியாது என்று சொல்வர்களா புலவர்கள் (பாடலாசிரியர்கள்)
திங்கள், 19 ஜூலை, 2010
புலவர்களின் மானம்


0 comments:
கருத்துரையிடுக