மொழி
மொழியை ஐந்து வகைப்படுத்துவர்.
கிளைமொழி
பொதுமொழி
சிறப்புமொழி
குறுமொழி
குழந்தை மொழி
கிளை மொழி :
நாம் பேசும் மொழியை பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ், என பகுபடுத்துகிறோம். பத்திரிகை தமிழ், கடித தமிழ், இன்றைய உரைநடைத்தமிழ், பழைய இலக்கிய தமிழ் என்று பலவாக எழுத்து தமிழை காணலாம்.
பேச்சுத் தமிழைப் பற்றி கூற வேண்டியதில்லை. அது ஒன்றே என்று கூறுவோர் ஒருவரும் இலர். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, இனத்துக்கு இனம் அது வேறுபாடும். மொழி ஆற்றலுடன் இயங்கி கொண்டே உள்ளது. இன்ன போக்கில் செல்கிறது என்று மட்டும் கூறமுடியும் என்று பிரெஞ்சு ஆசிரியர் வென்றியே கூறுகிறார்.
நினைவில்லாகுறை தவறுபட ஒலிக்கும் முறை நாவின் வழு முதலிய காரணங்களால் அந்த ஒரு மொழியே பலவாறு திரியவும் நேர்கிறது.
ஒருவர் ஒரே தொடரை முதல்முறை சொல்வதற்கும் அதனை பத்தாம் முறை சொல்வதற்கும் வேறுபாடு உண்டு. ஆகவே பலமுறை ஒரே தொடரை கூற நேரும் போது சொற்கள் திரிபடையும். மூளை நாளுக்கு நாள் வளர்ந்து மாறிவருவதால் போக்கிலும் அதற்க்கு ஏற்ற மறுத்தல் நிகழ்கிறது. நம் செவியில் வந்தடையும் பிறருடைய சொற்களும், தொடர்களும் பேசி பழகும் மொழியுடன் சேரும்போது மறுத்தல் நேர்கிறது என்று அறிஞர் வென்றியே கூறுகிறார்.
இருவகை பான்மை
ஒரு குழுவில் உள்ளவன் மற்றோர் குழுவினரோடு பழகும்போது, முன்னைய குழுவின் மொழியியல்புகள் இதனுள் கலைகின்றது. ஓர் ஊராரின் பேச்சு கூறுகள் மற்றோர் ஊராரின் மொழியில் கலக்கின்றது. இவ்வாறு ஒன்றோடு ஒன்று திரிந்தவரே உள்ளது.
இயல்பாக வேறுபடுவது
கிளை மொழி என்பது ஓர் இனத்தார் அல்லது ஓர் இடத்தார் அல்லது ஒரு கூட்டத்தை சார்ந்தவர் தமக்குள்ள தடையின்றி விளங்குமாறு இயல்பாக பேசிவரும் மொழியாகும். வேறுபாடு தெரியாதவரு இயல்பாக அமையும் மொழியாகும். ஒரு பகுதியினர் பேசும் மொழி கிளை மொழியாகும்.
ஒவ்வொரு பகுதியினரும் பேசும் மொழிக்கும் வேறுபாடு இருத்தலால் அவை வெவ்வேறு கிளை மொழி ஆகும்.
ஆற்றின் இந்த கரைக்கும் அந்த கரைக்கும் பேசுவோரது மொழியில் இந்த வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டில் சென்னை மொழி ஒருவகை, திருநெல்வேலி மொழி ஒரு வகை. இவ்வாறு கிளை மொழிகள் பல காரணங்களால் பல வகையை அமைகின்றது. இவை இயற்கையாய் அமைவதாகும். வேண்டும் என்றே அமைந்தால் அது குறுமொழி ஆகும்.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே இருந்த தமிழர்க்கும் மேற்க்கே இருந்த தமிழர்க்கும் பழக்கம் மிகுதியாக இருந்துவந்த காலம் சங்க காலமும் இடைகாலமும் தான். ஆகையால் அக்காலங்கல்லில் இருபுறமும் தமிழ் விளங்கியது. இரண்டிற்கும் வேறுபாடு வளரவில்லை. நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை மாறியது. மேற்கு பகுதியர்க்கும் கிழக்கு பகுதியர்க்கும் பழக்கம் குறைந்தது. ஆகவே மிலி வேறுபாடு மிகுந்தது. சேர நாட்டார் பேசிய மொழி பெரிதும் வேறுபட்டு மலையாளம் என்று வேறு பெயருடன் விளங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கும் வாடா ஆற்காடு மாவட்டத்திற்கும் கொள்ளல் கொடுத்தல் பழக்கம் இன்றும் இருந்து வருவதால் அவை மாறாமல் தமிழின் கிளைமொளியகவா இருந்து வருகின்றது.
கிளை மொழிகள் குறைதல்இன்று அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துக் கருவிகள் விரைவில் பரவும் இணையதளம், செய்தித்தாள், வானொலி, முதலியவைகளினால் கிளை மொழியின் வாழ்வு வரவரக் குறுகி வருகின்றது. பொதுமொழி விரைவில் ஆற்றலுடன் பரவ துணை புரிகின்றன.
மனிதன் குடும்ப மனிதனாக வாழும் நேரத்தைவிட ஊர் மனிதனபா வாழும் நேரம் மிகுதி. பலர் வீட்டில் இருப்பதை விட வெளி உலகில் தான் இருக்கிறான். இவற்றால் வேற்றுமைப் பன்மைக்கி உரிய வாய்ப்புகள் குறைந்து போவதால் இனி கிளை மொழிகள் வளர்வதற்கு வாய்ப்புக் குறைவு ஆகும்.
மாறுதல் இயற்கை தனி மனிதர் பல குழுக்களோடு பழகுவதில் உள்ள பலவகை வேறுபாடுகளே கிளை மொழிகளுக்குள்ளும் நாளுக்கு நாள் வேறுபாடுகள் பலவாய் பெருகுவதற்கு காரணமாகும். இவ்வாறு கிளைமொழிகள் ஒன்றோடொன்று கலந்தவண்ணம் மாறுதல்கள் மெல்ல மெல்ல ஏற்பட்டுக் கொண்டிருத்தல் இயல்பாகிறது.
.............................................................................................................................................................
பொது மொழி
தொடக்கத்தில் பலவகை வேறுபாடுகள் உடைய சிறுசிறு கிளை மொழிகள் தோன்றி வளர்ந்து, நாளடைவில் அத்தனைக்கும் பொது மொழியாய்ஒன்று தலை எடுக்கிறது. இனங்களுக்கும், இடங்களுக்கும் ஏற்ப வெவ்வேறாக இருந்த மொழிகள் மெல்ல மெல்ல மறைந்து பொதுவான பெருமொழி ஏற்படுகின்றது. அது எது எனில் முன் இருந்த கிளைமொளிகளில் ஒன்று.
தமிழ் மொழி என்று நாம் பேசும் மொழி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் ஒரு பகுதியில் பேசப்பட்டு வந்த ஒரு கிளைமொழி இருந்திருக்கலாம். அது படிபடியாக வளர்ந்து பொது மொழியாய் நாடெங்கும் பரவியது எனலாம்.
அறிந்ஞர் விட்னே அவர்கள், எந்த கிளை மொழி சிறந்த அறிஞர்களின் போற்றுதலை பெற்று இனிய ஒலிநயம் மிக்கதாக விளங்குகின்றதோ அது மற்றைய கிளைமொளிகளை விடச் சிறந்து விளங்கி அவை வழங்கும் இடங்களை எல்லாம் கைப்பற்றி அந்நாட்டுப் போதுமொளியாய் வளர்ந்து விடும் என்கிறார்.
நாகரிக பழக்கமும் போக்குவரத்து வாய்ப்பும் குறைந்த பழங்காலத்தில் நாகரிகம் வளர்ந்து நெருங்கி பழகும் நிலை ஏற்ப்பட்டு அதற்க்கு உரிய வகையில் போக்குவரத்து கருவிகளும் கிகுந்துள்ள இக்காலத்தில் எல்லோரும் எல்லோருடனும் கூடிப் பழகும் பொதுவாழ்க்கை மிகுந்துள்ளது. பொதுமொழி சிறந்து வளர்வதற்கு இப்போது வாய்ப்பு மிகுதி.
இக்காலத்தில் மக்கள் பலரும் கூடிப்பழக முடிகிறது. இடம் விட்டுச் சென்று பலகதவர்களும் இருந்த ஊரிலிருந்தே மற்ற ஊராரின் மொழியை இணையதளம், திரைப்படம், வானொலி முதலியவற்றின் வாயிலாக கேட்டறிய முடிகிறது.
...................................................................................................................................................................
சிறப்பு மொழி
சிறப்பு மொழி தொழில் முதலாய காரணம் பற்றி அமையும் குளுவினர்க்குள் மொழியில் அமையும் சிறப்புக் கூறுகளை கருதி அவர்களின் மொளிவகைக்ளை சிறப்பு மொழிகள் என கூறுவார். அவற்றையும் கிளைமொழி என்றோ குறுமொழி என்றோ கூறுவரும் உலர்.
இத்தகைய சிறப்பு மொழிகளில் பொது மொழிகளின் கூறுகள் மிகுந்தி இருக்கின்றன. இவை பொது மொழியிலிருந்தே வளர்ந்தவை. இதில் சமயம், சட்டம், ஆசிரியர்கள் சார்ந்த அறிஞர்கள் வழங்குவது உயர்ந்தவை எனவும் பள்ளிச் சிறார்கள், சிறைகைதிகள், போக்கிலிகள் முதலியவர் படைத்து வழங்குவது இழிந்தவை எனவும் அறிஞர் வென்றியே கூறுகிறார்.
சிறப்பு மொழிகள் அந்தந்தக் குழுவினர் தமக்குள்ள பயன்படுத்துவதர்கா தாமே வேண்டுமென்று போதுமொளியுள் சிலவற்றை மாற்றி அமைத்துக் கொண்டவை. அவை பொது மொழியின் மீது வளர்ந்து அமைந்தவை.
கிளை மொழிகள் என்பவை இயற்கையாக அமைந்தவை. வேறுபட வேண்டும் என்ற எண்ணம் இவற்றை பேசுவோரிடம் இல்லை. வேறுபாடு அவர்கள் அறியாமல் இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. கிளைமொழிகள் பொது மூளிக்கு அடிப்படையில் உள்ளவை. கிளைமொளியை ஓர் குறிப்பிட்ட இடத்தில் உள்ள எல்லோரும் பேசுவர். சிறப்பு மொழி அவரவர் மனப்பான்மை தொழிலுக்கு ஏற்ப மாறுபடும். சட்டம், சமயம் துறைகளில் உள்ள சிறப்பு மொழிக் கூறுகள் எழுதி வைக்கப் படுவதால் அவை நிலைத்து நிற்கின்றன.
...................................................................................................................................................................
குறுமொழி
குறுமொழி பொது மொழியிலிருந்து வேறுபட்டு இயல்பாக அமையும் மொழி கிளை மொழி. அதுபோலவே பொது மொழியிலிருந்து வேறுபட்டு செயற்கையாக அமைக்கப்படும் மொழிக்கூறுகள் குறுமொழி ஆகும். பள்ளிகளில் ஒன்று சேர்ந்து விளையாடும் மாணவர்கள், கள்ள வாணிபம் செய்வோர் முதலிய பல குழுவினர் தமக்குள்ள வழங்கும் மொழி இவ்வகையை சாரும்.
ஒவ்வொரு சரரரிடமும் தனி சிறப்பாக உள்ள மொழி எல்லாம் குருமொழியே என அறிஞர் வென்றியே கூறுகிறார்.
குறுகிய ஒரு கூட்டத்தார் தமக்குள்ள வழங்கி மகிழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் செயற்கை மொழி. பொது மொழி போலவோ, கிளைமொழி போலவோ, நின்று வாழும் தகுதி இன்றி குறுகிய காலமே வாழ்ந்து மறைவது.
எ.கா :
போனார் - கம்பி நீட்டினார்
அவனை ஏமாற்றினார் - அவன் விலே மண்ணை போட்டுட்டன்.
அவன் லஞ்சம் வாங்கும் காலம் - அவனுக்கு அறுவடை காலம்
செருக்குடன் இருக்குறான் - அவனுக்கு தலைகால் புரிவல்லை
சிறை - மாமியார் வீடு முதலியவை.
....................................................................................................................................................................
குழந்தை மொழி
குழந்தை மொழி மொழி முதலில் தோன்றி வளர்ந்த முறை வேறு. ஒரு குழந்தை மொலியைஉ கற்று வளரும் நிலை வேறு. பல்வகை அமைப்பும் நிறைந்து பண்பட்டே மொழியையே குழந்தை கற்கத் தொடங்குகிறது.
குழந்தை பருவத்தில் முதல் மூன்று நன்கு ஆண்டுகளில் கற்கும் அவ்வளவு கல்வியை வேறு எந்த மூன்று ஆண்டுகளிலும் மனிதன் கற்பதில்லை.
குழந்தை பருவத்தில் மொழியைக் கற்கும் பொது செய்யப்படும் முயற்சி மிகப்பெரியது. ஆயினும் அது துன்பமாகவே உணரப்படுவதில்லை.
குழந்தை மொழியைக் கற்கும் நிலை மூவகைப்படும். அவை அழுநிலை, செங்கீரை நிலை, பேச்சு நிலை.
பசித்துன்பத்தையோ, வேறோன்றையோ அழுகுதலால் தெரிவிக்கும் நிலை அழுநிலை.
குழந்தை தான் நாக்கை ஒரு விளையாட்டுப் பொருளே கருதி தன்னை அறியாமல் அசைந்த அசைவுகளால் ஏற்படும் முதல் கால ஒலிகளை செங்கீரை நிலை ஆகும். இதன் அடுத்த நிலை தான் சொல் வடிவு. அது பேச்சு நிலை.
(மொழி வரலாறு - மு.வரதராசன்.)
வெள்ளி, 9 ஜூலை, 2010
மொழி


0 comments:
கருத்துரையிடுக