தமிழ் இலக்கிய பாகுபாடு.
பழங்காலம்
சங்க இலக்கியம்:
கி.மு. 500 முதல் கி.பி. 200 வரையில் அகம் புறம் பற்றிய பாடல்கள்.
நீதி இலக்கியம் :
கி.பி. 100 முதல் கி.பி.500 வரையில். திருக்குறள் முதலிய நீதி நூல்கள், கார் நாற்பது முதலிய வெண்பா, முத்தொள்ளாயிரம் நூல்கள்.
இடைக்காலம் :
பக்தி இலக்கியம் : கி.பி 600 முதல் கி.பி 900 வரை நாயன்மார், ஆழ்வார் பாடல்கள்.
பலவை நூல்கள் : கி.பி. 700 - 1300
காப்பியங்கள் : கி.பி. 500 முதல் கி.பி.1200 .
பெருங்கதை, சீவகசிந்தாமணி, முதலிய சமண, பௌத்த நூல்கள்.
செகிளார், கம்பர், ஒட்டக்கூத்தன், ஒளவையார் முதலியவர்கள்.
உலாபரணி பிள்ளைத் தமிழ் இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்.
உரைநூல்கள்: கி.பி 1200 முதல் கி.பி. 1500 வரையில் ; இளமபூரனார் பேராசிரியர் முதலியவர்கள்.
தமிழ் இலக்கியம் : வைணவ விளக்க நூல்கள், சைவ சித்தாந்த சரித்திர நூல்கள், சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.
புராண இலக்கியம் : கி.பி. 1500 முதல் கி.பி.1800 வரையில் புராணங்கள், தல புராணங்கள், இசுலாமிய இலக்கியம், கிறித்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள் உரைநடை வளர்ச்சி.
பத்தொன்பதாம் நூற்றாண்டு: கிறித்தவ இலக்கியம், இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள், நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.
இக்காலம் :
இருபதாம் நூற்றாண்டு:
பாரதி, கல்கி, புதுமைபித்தன், சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை ஆராய்ச்சி முதலானவை.
0 comments:
கருத்துரையிடுக