சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தமிழ் மொழி

உலகின் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன. ஒரு சில மொழிகள் மட்டும் இன்ன்றும் அழியாமல் நிலைப் பெற்றுள்ளன. அவ்வாறு நிலைத்துள்ள மொழிகளிலும் சில பேச்சு குறைந்து இலக்கிய மொழியாக மட்டும் வளர்ந்து மாயும் மொழிகளுக்கு இடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ், சீனம் முதலிய சில மொழிகளே. இவற்றுள்ளும் பழமைக்கும் பழமையான, இலக்கியவளம் உடையதாய் நிர்ப்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழியாகும்.
ஆதலின் தமிழ்மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும்.

மொழியின் வரலாறு.
மொழி என்பது பேசப்படும் நாட்டின் வரலாற்றோடும் மக்களின் வரலாற்றோடும், இயைந்தது. உடலுறுப்புகளால் ஒலிக்கப்படுவது மூளை நரம்புகளின் அசைவுகளால் எண்ணங்களின் எழுச்சியாலும், வளர்ச்சியாலும் அமைவது.

போதா முயற்சி
வரலாற்றுக்கு எட்டாத பழங்காலத்தை ஆராய்வோர் மூவகை படுவோர்.
பழைய மனித எலும்புக் கூடுகளையும்  மண்டையோடுகளையும் கொண்டு ஆராய்ச்சி நடத்தும் பழமையரய்ச்சியாளர்,
பழங்கால கருவிகள், நகைகள் முதலியவற்றைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தும் புதைபோருலாராய்சியாளர்
உள்ள ஒலிகளையும், சொற்களையும் கொண்டு பழைய நிலை இவ்வாறு இருந்திருக்கக் கூடும் என எண்ணி ஆராய்ந்தறியும் மொழியியல் ஆராய்ச்சியாளர்
இம்மூவரும் வரலாற்றுக்கு எட்டாமல் இருண்டுகிடக்கும்  பழைய நிலைகளை ஆராய்வோர்  ஆவர்.

மொஹஞ்சதாரோ, ஹரப்பா முதலிய ஒரு சில சான்றுகள் தவிர, திராவிட வரலாற்றிற்கு உரிய சான்றுகள் இன்னும் போதிய அளவிற்கு உலகறிய வெளிக் கொணரப்படவில்லை!

முதல் மக்களினம்
முதல் முதலில் இந்தப் பரந்த நிலவுலகில் ஒரு பகுதியில் மக்கள் தோன்றி வளர்ந்தனர். அவர்கள் பேசிய மொழியே முதல் மொழி. அந்த மக்கள் பின்னர்ப் பல்வேறு இடங்களில் குடியேறினர். குடியேறிய மக்கள் அவ்வவ் விடங்களில் அந்த மொழியைப் பல்வேறு வைகையகத் திரித்து பேசினார். அதனால்தான் மொழிகள் பலவாக ஏற்பட்டன. நாளடைவில் அந்த மொழிகளில் ஒவ்வொன்றும் பல்வேறு கிளை மொழிகளாகப் பிரிந்து வளர்ந்தன. அவ்வாறு மக்கள் முதல் முதலில் தோன்றிய நிலப்பகுதியை லெமூரிய என்பர். அது இந்தியக் கடலில் இருந்து அழிந்தது என்றும் அழிந்தபின் மக்கள் பல்வேறு திக்குகளில் சிதறி அங்கங்கே குடியேறினர் என்றும், ஐரோப்பாவில் சேர்ந்தவர் ஐரோப்பியர் என்றும், ஆப்ரிகாவில் சிதறி சென்றவர் ஆப்பரிக்கர் என்றும், இந்தியாவில் சேர்ந்தவர் இந்தியர் என்றும் ஜாவா, சுமாத்ரா வழியாக சீன முதலிய பகுதிகளுக்குச் சென்றவர் மங்கோலியர் என்றும் இவ்வாறு பலவை மக்களாக வாழ நேரிட்டது என்றும் கூறுவார். அந்த நாட்டுத் தட்பவெட்ப  நிலையாலும், உணவு வகையாலும் நிறமும், உடலமைப்பும் வேருபடலாயின  என்பர்.
லெமூரிய என்றழைக்கப்படும் நிலப்பரப்பே குமரிக்கண்டமாகும். அங்கே குமரிமலை என்ற பெருமலையும் பக்ருளியாறு என்னும் ஆறு ஓடியது என்றும் பழந்தமிழ் பாட்டுக்கள் அறிவிக்கின்றன.
அத்தகைய குமரிக்கண்டத்தில் முதலில் மக்கள் இருந்தனர் என்றும் அவர்கள் பேசிய மொழியே உலகின் முதல் மொழி என்று கொண்டால் பழண்டமிழரே  முதலில் தோன்றிய மக்கள் என்றும், பழநதமிழே முதலில் பேசப்பட்ட மொழி என்றும் உலகில் ஆங்கிலேயர் முதலான் ஐரோப்பியரும் மற்ற இனத்தவரும் பழந்தமிழரின் வழித்தோன்றியவர்களே என்றும் மொஹஞ்சதாரோ-ல் வளர்ந்த பழந்தமிழ் நாகரிகமே மத்திய தரைக்கடலை அடுத்த பகுதிகளில் எகிப்து நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், கிரேக்க நாகரிகம் முதலியன வளரக் காரணமாக இருந்தது என்றும் கருத இடம் உள்ளது.




















மொழி வரலாறு - மு.வரதராஜன்

0 comments:

கருத்துரையிடுக

Pages 181234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More