சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

சனி, 17 ஜூலை, 2010

விளம்பரங்கள் (advertisement)

விளம்பரங்கள்

ஆரம்பகலங்களில் குறிப்பாகா சொன்னால் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பமான நேரங்களில் நிகழ்ச்சிக்கு இடையில் தான் விளம்பரங்கள் ஒளிப்பரப்புவார்கள். ஆனால் தற்போது நிலைமையே வேறு. விளம்பரங்களுக்கு இடையில்தான் நிகழ்ச்சியே ஒளிப்பரப்புகிரார்கள். அது சரி காசு வந்தால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்புவார்கள் (நித்தியானந்தா - ரஞ்சிதா படுக்கையறை ஒளிப்பதிவு காட்சி) இன்றைக்கு உள்ள தனியார் தொல்லைக்காட்சி நிலையத்தார்கள்.

அப்படி நான் பார்த்து ரசித்த விளம்பரங்கள் உலக பார்வைக்கு.

காப்பீடு நிறுவன விளம்பரம் :
நண்பர்கள் நிகழ்ச்சிக்கு மாறுவேடத்தில் சென்று வேடத்தினை கலைக்காமலேயே மகிழுந்தில் (car) வந்து கொண்டிருப்பார்கள். மகிழுந்து ஒட்டிக்கொண்டு வரும் நபர் மான் வேடம் அணிந்திருப்பார். சிறுது தூரம் போனபிறகு சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்திவிட்டு ஒரு புதருக்குள் செல்வார். அச்சமயம் சற்று தூரத்தில் ஒருவர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு விலங்குகளை வேட்டையாட கத்து கொண்டு இருப்பார். தூரத்தில்,  இருந்து பார்ப்பதற்கு உண்மையான மான் போலவே வேடமிட்டவர் காட்சியளிப்பார். அதனால் வேட்டையடுபவர் வேடமிட்டவரை சுட்டு விட வண்டியில் உள்ளவர்கள் தூக்கம் விழித்து ஒலி வந்த இடத்தை நோக்கி காண்பார்கள். அப்போது திரையில் அந்த நிறுவனத்தில் ஈர்ப்பு வாரத்தில் வரும்
அது
துன்பங்கள் பலவகையில் வரும்.
............... காப்பீடு இருக்க பயமேன்.
......................................................................................

பால் விளம்பரம்
ஒரு சிறுவன் தன் தந்தையின் மகிழுந்தில் (car) உட்கார்ந்து கொண்டு வண்டி ஓட்டுவதை போல் செய்வன். அதற்க்கு அவன் தந்தை ஆக இதற்க்கு நீ இன்னமும் வளர வேண்டும் என்று சொல்வார். கோபமாகி வீட்டின் உள்ளே சென்று ஒரு தம்ளர் பாலினை குடிதிவிட்டு அவன் அப்பாவிடம் சாவியை கேட்பான். அவன் அப்பா திகைத்து நிற்பார். அந்த பால் தயாரிக்கும் நிறுவனம் அப்போது உபயோகிக்கும் வார்த்தை.
வேகமாக வளர .............. பால் குடிங்க.
.......................................................................... ...........

நகைக்கடை விளம்பரம்
நகை கடை விளம்பரத்துக்கு ஒரு பெண் அழகாய் கான்பிக்கபடுவாள்.  அதன் பின்னணியில் பாடல் ஒன்று ஒலிக்கப்படும். காட்சியமைப்புகளும் அழகாய் அமைத்திருப்பார்கள்.
அந்தப் பாடல்.........
அழகழகாய்....
அற்புதமாய்....
விதவிதமாய்.....
வித்தியாசமாய்....
.................. ஜுவல்லரி , திருநெல்வேலி.
என்று வரும்.
.........................................................................................
தேயிலை தூள் விளம்பரம்.
கணவன் மனைஒய் இருவரும் தேநீர் அருந்தி கொண்டிருப்பார்கள். அப்போது கணவர் மனிவியிடம் நான் உன்னிடல் ஒன்று சொல்லணும் என்று ஆரம்பிக்க 
மனைவி அவரிடம் அதுவா இதுவா என்று கேட்க, அதற்க்கு கணவர் மறுக்க
இறுதியில் மனைவி கோபத்தின் உச்சிக்கு செல்ல கணவர் மவுனமாக i love U என்று
சொல்லுவார். அப்போது இருவரும் ஒரு மாதிரி சிரிப்பார்கள். அந்த காட்சி பார்பதற்கு அழகாய் இருக்கும்.
.........................................................................................

மீண்டும் ஒரு விளம்பரத்தில் சந்திப்போம்.

0 comments:

கருத்துரையிடுக

Pages 181234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More