சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

சனி, 31 ஜூலை, 2010

டௌ கெமிக்கல்ஸ்

டௌ கெமிக்கல்ஸ்2001 -இல் இன்னொரு அமெரிக்க ரசாயனக் கம்பெனியான டௌ கெமிக்கல்ஸ் கார்பைடு கம்பனியை வாங்கிவிட்டது.  வியத்நாமில் மக்களை எரித்துக் கொள்வதற்கான நாபாம் என்ற பாஸ்பரஸ் குண்டுகளையும், காடுகளை எரித்துப் போட்டலாக்குவதர்கான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சு ரசாயனத்தையும் அமெரிக்கவுக்கு தயாரித்துக் கொடுத்தான், சதாம் உசேனுக்கு பேரழிவு ரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்ததும் டௌ கெமிக்கல்ஸ் என்ற இந்தக் கொலைக்கார நிறுவனம் தான்,  போபால் ஆலையில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்றிருக்கும் கொடிய ரசாயனக் கழிவுகளை அரசாங்கம் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று கூறுகிறது டௌ கெமிக்கல்ஸ். ரசாயன கழிவுகள் நிலத்தடி நீரில் இறங்கி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை இன்னும்...

வெள்ளி, 30 ஜூலை, 2010

காதுக்கள் கேட்க மகிமைகள்‏

1. "நான் சொல்வதை காது கொடுததுக் கேட்கிறானா?" பிரச்சினைகள் வரும்போது இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் கூறும் வார்த்தை இது. உலகில் கேட்பதில்தான் அதிக ஞானம் பெறமுடியும். வளளுவரும் "செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" எனறு கூறி இருககிறார்.கண்கள் மனிதனுக்கு 80 சதவீத அறிதலைத் தருகிறதாம். ஆனால் கண்ணிருநதும், காது இலலாவிட்டால் நமக்கு உலகத் தொடர்பே அற்றுப்போகும். ஆமாம், எல்லாமே பேசாத உலகமாகத்தான் தெரியும். ஒரு நிமிடம் காதைப் பொத்திப் பாருங்கள். உண்மை புரியும். கேட்க முடியாவிட்டால் பேச்சும் வராது தெரியுமா?2. ஒலி "டெசிபல்" எனற அலகால் அளக்கப்படுகிறது. மனிதனால் 20 முதல் 2,000 ஹெர்ட்ஸ் அலைநீளம் உள்ள ஒலியைக் கேட்க முடியும். டெசிபல் அளவில் 80 டெசிபல் ஒலியை ஆபத்தில்லாமல் கேட்கலாம்.  அதிக ஒலி உள்பட பல்வேறு காரணங்களால் காது கேட்பதில் கோளாறு ஏற்படும்.சிலருக்கு பிறவியிலேயே காது கேட்காமல்...

திங்கள், 26 ஜூலை, 2010

ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!

ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் புதிதாகத் திறந்த விமான முனையத்தை பற்றி ஊடகங்கள் வியந்து முழுப் பக்க கவரேஜூடன் புளகாங்கிதம் அடைந்தன. உலகத்தரம், 13,000 கோடி செலவு, பல இலட்சம் பயணிகளை சமாளிக்கலாம் என்று இந்திய தேசபக்தி பீரிட்டு வழிந்தது. இந்த முனையத்தில் வந்திறங்கிய விமானங்களை தூறல் பொழிந்து வரவேற்றார்கள்.ஆனால் இதே தில்லியில் சில மாதங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏற முயன்ற நெரிசலில் சிலர் மிதிபட்டு இறந்தனர். ஏழைமக்கள் பயன்படுத்தும் ரயிலில் இடமில்லை. பிசினஸ் கிளாசில் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் கனவான்களுக்கு 13,000 கோடி செலவு.புது தில்லியில் விரைவில் ஆரம்பிக்கப் போகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவில் கட்டுமானப்பணிகள் மும்மூரமாக நடந்த வண்ணம் உள்ளன....

சமயபுரம் மாரியாத்தா

வினவிலிருந்து........சமயபுரம் மாரியாத்தா ! இந்த பிராடு வேலை எதுக்காத்தா?சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அட்டை வடிவமைப்பு வேலையாக ஒரு சிறு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். ஒரு பெண் ஊழியரோடு வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்ததாகக் கூறி பரபரப்பு அடைந்தார். ஏன் என்று கேட்டேன்.திருப்பதி லார்டு வெங்கட்டின் மனைவி நாச்சியார் கழுத்திலிருந்து தாலி தவறி விழுந்து விட்டதாம். இதனால் சுமங்கலிப் பெண்களின் கணவன்மார்களுக்கு  ஆபத்தாம். பரிகாரத்திற்கு புது தாலி கட்ட வில்லை என்றால் கணவன் தலை சாயுமாம். இந்த மின்னஞ்சலையும் பத்து பேருக்கு அனுப்ப வேண்டுமாம். பிறகு இந்த தகவல் பலரது எஸ்.எம்.எஸ்ஸூக்கும் பரவியதை அறிந்தேன்.பிறகென்ன? தி.நகரை மொய்த்த மக்கள் குறிப்பாக பெண்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுத்து தாலிகளை துய்த்து ஆபத்தை கடந்தார்கள். இப்படி அடிக்கடி நடப்பதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்.தங்க...

திங்கள், 19 ஜூலை, 2010

வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!

சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலை கீழாய் மாற்றமடைந்தது. அமெரிக்காவின் அராம்கோ நிறுவனம் எண்ணெய் துரப்பணத்தை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டது, சில மாற்றங்களுடன் இன்றும் அது தொடர்கிறது.அதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி, எண்ணெய் பாயத்தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று பெருமளவில் வேலை வாய்ப்புகளை கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில் எழுபதுகளின்...

புலவர்களின் மானம்

சங்க புலவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி இயற்கையை கூர்ந்து நோக்கி உணர்ந்து அழகிய காட்சியை பாடினார்கள்.புலவர்கள் மானம் நிறைந்தவர்கள். வறுமையால் வாடிய நிலையிலும் பிறர்க்குத் தாழ்ந்து பணிந்து போக முடியாத பெருமித மனநிலை பெருஞ்சித்தனார் முதலான புலவர் பலருக்கு இருந்தது. அதனால் புலவர்கள் செல்வர்களின் முன்னே நின்று கெஞ்சி கேட்பதாகப் பாட்டுகள் இல்லை.மொசீகரனார் என்ற புலவர் கொண்கானத்து தலைவனை அணுகி போருனுதவி கேட்டபோது, எனக்குப் பொருண் கொடு என்று இறந்து கேட்க என்னால் இயலாது. ஆனால் உன்னுடைய மலையைப் புகழ்ந்து படுவது எனக்கு விருப்பமான செயல் எளிமையான  செயல் என்று கூறி அவன் மலையைப் பாடினார்.ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு.  காசுக்காக எதைவேண்டுமானாலும்  செய்யுமளவிற்கு மாறியுள்ளனர் இக்கால புலவர்கள் (சிலர் விதி விலக்காக உள்ளனர்)முழுமதி இல்லாத நாடு இரவில் சென்று சிறுநீர் கழிக்கக் கூட வீரம் இல்லாதவர்களுக்கு...

சனி, 17 ஜூலை, 2010

கடவுள்

கடவுள் என்றால் என்ன என்றே தெரியாமல் பல கோடி பேர் இன்றளவும் பல கோவில்களுக்கும், பல பரதேசிகளிடமும் சென்று தனது பொன்னான வாழ்வு நேரத்தையும், செல்வங்களையும் வீணடித்து கொண்டிருக்கின்றனர். (எனது அம்மா உட்பட)இன்றைக்கும் நாம் தெய்வங்கள் என்று கூருபவைகள் யாவும் பொய்யானதே. தெய்வம் என்பதே ஆதிகாலத்தில் நம் நாட்டில் (தமிழ் நாட்டில் ) இல்லை எனலாம். கி.மு 3 நூற்றாண்டில் இயற்ற்றப்பட்ட தொல்காப்பியம் தான் நமக்கு கிடைத்த முதுபெரும் தமிழ் நூலாகும். பழக்கங்கள் தான் வழக்கங்கலாயின. அதுபோல் தான் தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த இலக்கியங்களை ஆராய்ந்த பிணிபு தான் அவர் அந்த இலக்கண நூலினையே இயற்றினார்.  இதற்கு அவர் முன்னோர் கூறியது, என்பர். எனக் குறிப்பிடுவதே சான்றாகும்.அப்படிப்பட்ட அந்த நூலில் "ஞாயிறு போற்றதும்" என்று கூறினாரே தவிர வேறு தெய்வங்களையோ அதன் பெயர்களையோ அவர் குறிப்பிடவில்லை....

விளம்பரங்கள் (advertisement)

விளம்பரங்கள்ஆரம்பகலங்களில் குறிப்பாகா சொன்னால் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பமான நேரங்களில் நிகழ்ச்சிக்கு இடையில் தான் விளம்பரங்கள் ஒளிப்பரப்புவார்கள். ஆனால் தற்போது நிலைமையே வேறு. விளம்பரங்களுக்கு இடையில்தான் நிகழ்ச்சியே ஒளிப்பரப்புகிரார்கள். அது சரி காசு வந்தால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்புவார்கள் (நித்தியானந்தா - ரஞ்சிதா படுக்கையறை ஒளிப்பதிவு காட்சி) இன்றைக்கு உள்ள தனியார் தொல்லைக்காட்சி நிலையத்தார்கள்.அப்படி நான் பார்த்து ரசித்த விளம்பரங்கள் உலக பார்வைக்கு.காப்பீடு நிறுவன விளம்பரம் :நண்பர்கள் நிகழ்ச்சிக்கு மாறுவேடத்தில் சென்று வேடத்தினை கலைக்காமலேயே மகிழுந்தில் (car) வந்து கொண்டிருப்பார்கள். மகிழுந்து ஒட்டிக்கொண்டு வரும் நபர் மான் வேடம் அணிந்திருப்பார். சிறுது தூரம் போனபிறகு சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்திவிட்டு ஒரு புதருக்குள் செல்வார். அச்சமயம் சற்று தூரத்தில் ஒருவர் துப்பாக்கியை...

வெள்ளி, 16 ஜூலை, 2010

கேலி சித்திரம் Cartoon

என்னை மிகவும் சிரிக்க (சிந்திக்க) வைத்த  கேலி சித்திரம்.நன்றி : வினவு.&nb...

புதன், 14 ஜூலை, 2010

தமிழ் இலக்கிய பாகுபாடு.

தமிழ் இலக்கிய பாகுபாடு. பழங்காலம் சங்க  இலக்கியம்:கி.மு. 500 முதல் கி.பி. 200 வரையில் அகம் புறம் பற்றிய பாடல்கள்.நீதி இலக்கியம் : கி.பி. 100 முதல் கி.பி.500 வரையில். திருக்குறள் முதலிய நீதி நூல்கள், கார் நாற்பது முதலிய வெண்பா, முத்தொள்ளாயிரம்  நூல்கள்.இடைக்காலம் :பக்தி இலக்கியம் : கி.பி 600 முதல் கி.பி 900 வரை நாயன்மார், ஆழ்வார் பாடல்கள்.பலவை நூல்கள் : கி.பி. 700 - 1300காப்பியங்கள் : கி.பி. 500 முதல் கி.பி.1200 .பெருங்கதை, சீவகசிந்தாமணி, முதலிய சமண, பௌத்த நூல்கள்.செகிளார், கம்பர், ஒட்டக்கூத்தன், ஒளவையார் முதலியவர்கள்.உலாபரணி பிள்ளைத் தமிழ் இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்.உரைநூல்கள்: கி.பி 1200 முதல் கி.பி. 1500 வரையில் ; இளமபூரனார் பேராசிரியர் முதலியவர்கள்.தமிழ் இலக்கியம் :  வைணவ விளக்க நூல்கள், சைவ சித்தாந்த சரித்திர நூல்கள், சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.புராண...

சொற்களின் பாகுபாடும் அமைப்பும்

சொற்களின் பாகுபாடும் அமைப்பும் தமிழில் உள்ள சொற்கள் நான்கு வகை. அவற்றுள் உரிச் சொல் என்பவை வழக்கு இலந்தனவாய்ப் பழைய செய்யுளில் உள்ள அடிச் சொற்கள் அவை நீக்கிப் பார்த்தல்  பெயர்ச்சொற்கள் வினைச்சொற்கள் இடைச்சொற்கள் என் மூவகைப் படும்.பெயர்ச்சொற்கள்பெயர்ச்சொற்கள் திணை, பால், எண், இடம் உணர்த்தும்,திணை : உயர்திணை அக்றிணை என இருவகைப் படும். பகுத்தறிவு உடைய மனிதர் உயர்திணை. மற்ற எல்லாம் (உயிர் உள்ளவை இல்லாதவை) அக்றிணை.பால் : ஆண் பால், பெண்பால், பலர்பால் என உயர்திணை-இல்  பால் மூன்று. அக்றிணை-இல் ஒன்றன் பால், பலவின்பால் எனப் பால் இரண்டே.எண் : எண் ஒருமை, பான்மை என இருவகையே.  (இருமை கிடையாது.)இடம் : தன்மை முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று. வினைச்சொற்கள்:வினைச் சொற்கள் முற்றுவினை எச்சவினை என இருவகைப்படும்.முற்றுவினை : முற்றுவினைகளில் பெரும்பாலானவை திணை, பால்...

செவ்வாய், 13 ஜூலை, 2010

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர்இரண்டாம் உலகப்போர் அல்லதுஉலகப்போர் 2 என அறியப்படுகிறதுஇருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல், போரியல் முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டுஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில்செருமனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைபெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள்நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டுப் போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்[1].இப்போரில் தான் முதன்முதலாகஅணுகுண்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்காசின்னப்...

Pages 181234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More