
டௌ கெமிக்கல்ஸ்2001 -இல் இன்னொரு அமெரிக்க ரசாயனக் கம்பெனியான டௌ கெமிக்கல்ஸ் கார்பைடு கம்பனியை வாங்கிவிட்டது. வியத்நாமில் மக்களை எரித்துக் கொள்வதற்கான நாபாம் என்ற பாஸ்பரஸ் குண்டுகளையும், காடுகளை எரித்துப் போட்டலாக்குவதர்கான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சு ரசாயனத்தையும் அமெரிக்கவுக்கு தயாரித்துக் கொடுத்தான், சதாம் உசேனுக்கு பேரழிவு ரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்ததும் டௌ கெமிக்கல்ஸ் என்ற இந்தக் கொலைக்கார நிறுவனம் தான், போபால் ஆலையில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்றிருக்கும் கொடிய ரசாயனக் கழிவுகளை அரசாங்கம் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று கூறுகிறது டௌ கெமிக்கல்ஸ். ரசாயன கழிவுகள் நிலத்தடி நீரில் இறங்கி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை இன்னும்...