தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகஸ்ட் 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது
அரசியல் வாழ்வு, கொள்கை
தலித் மக்களின் உரிமைகளுக்காக் போரட்டம் நடத்தல்,தனித்தமிழ் வளர்சிக்கு உதவுதல்,சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடல்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும்,தனித்மிழீழத்திற்காக ஆதரவளித்தல்,இந்துத்துவ கொள்கையினை எதிர்தல் போன்றன அவரது முக்கிய கொள்கையாகும்.
படைப்புகள்
சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக திருமாவளவன் பல கட்டுரைகள், நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:
அத்துமீறு
தமிழர்கள் இந்துக்களா?
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
இந்துத்துவத்தினை வேரறுப்போம்
இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
திரைப்படங்கள்
திருமாவளவன் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும்.இதில் இவர் கிளர்ச்சி தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார். இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாதிரியாக அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது.இதுதவிர கலகம்,என்னைப்பார் யோகம் வரும் ஆகிய திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக