கருணாநிதிக்கு ஒரு தறுதலை எழுதிய கடிதம்.
>
> Posted: 09 Jan 2010 12:52 PM PST
>
> தானைத் தலைவருக்கு,
>
> இந்த தறுதலை தமிழனின்
> தலைவணங்கிய
> வணக்கங்கள். ‘என்னடா,
> இவன் தன்னைத் தானே
> தறுதலைன்னு
> சொல்லுறானேன்னு தப்பா
> நெனச்சுக்காதீங்க
> தலைவரே
> புள்ளைகளுக்கெல்லாம்
> அப்பன் வெக்கறது
> தானுங்க பேரு. வேலை
> வெட்டி எதுக்கும்
> போகாம நீங்க குடுத்த
> வண்ணத் தொலைக்காட்சி
> பெட்டில நீங்களும்
> உங்க வாரிசுகளும்
> வகைவகையா நடத்துற
> சேனல்கள்ல படம்
> பாட்டுத்துட்டு ஊர்
> மேஞ்சுட்டு
> இருந்ததனால ஊர
> அழைக்காமலேயே
> எங்கப்பன் எனக்கு
> வெச்ச ரெண்டாவது பேரு
> தானுங்க இந்த
> தறுதலைங்கற பேரு. பேரு
> நல்லா இருக்குங்களா
> தலைவரே?
>
> என்ன பண்ணித்
> தொலைக்கிறது தலைவரே
> எங்கப்பன் அம்பானி
> மாதிரி சொத்து சேத்து
> இருந்தா எனக்கு
> அதகொடுத்துருப்பாரு.
> இல்ல உங்கள மாதிரி
> அரசியல் செல்வாக்கு
> சேத்து வெச்சிருந்தா
> வெளங்காத என்ன மாதிரி
> புள்ளைக்கு ஒரு
> பதவியவாவது தூக்கி
> கொடுத்திருப்பாரு.
> அந்தாளே ஊர்ஊராப் போயி
> வேலைதேடி கல்லு மண்னு
> சொமந்து எனக்கு
> சோறுபோட்டு “வெந்ததத்
> தின்னுட்டு விதிவந்தா
> சாகலாம்னு” இன்னைக்கு
> செல்லாக்காசா
> உக்காந்துட்டு
> இருக்காரு.
> அந்தாளுகிட்ட தறுதலை
> தண்ட சோறுங்கற பேர தவிர
> எனக்கு தூக்கிக்
> கொடுக்க ஒன்னுமில்ல.
> அதனால போனா போகுதுன்னு
> அதையே நானும்
> வாங்கிகிட்டேன்.
>
> பேரு கிடக்குது
> தலைவரே பேரு.
> நமக்கெல்லாம் சோறு
> தானே முக்கியம். அதனால
> பேசாம கிடக்கிறேன்.
> நீங்க குடுக்குற ஒரு
> ரூவா அரிசியில
> பொங்கிப்போடறதுக்கே
> எங்கப்பனுக்கு இத்தனை
> ஓப்பாளம். கேட்டா
> பருப்பு 98 ரூவா, பாலு 48
> ரூவான்னு பாட்டு
> பாடறான் அந்த மனுசன்.
> எதுத்தும் பேச முடியல.
> பேசுனா குடும்பம்
> ரெண்டாபோயிடும்.
> நமக்கென்ன தலைவரே
> நாலஞ்சு டி.வி. சேனலா
> இருக்கு. குடும்பம்
> ரெண்டானா சேனல் 16
> ஆகும்னு
> கணக்குப்போட்டு காய்
> நகத்தறதுக்கு? வீட்ட
> விட்டு வெளிய வந்தா
> சோத்துக்கே
> சிங்கியடிக்கனும்.
> மானம் ரோசம் பாத்தா
> வயித்த யாரு
> பார்க்கறதுங்கறதாலதான்
> அடங்கிப்
> போயிட்டிருக்கேன்
> தலைவரே.
>
> எல்லா அப்பனும் உங்கள
> மாதிரி இல்லாட்டியும்
> அட்லீஸ்ட் அம்பானி
> மாதியாவது சொத்து
> சேத்து வெக்கணும்னு
> ஒரு ஆடர் போடுங்க
> தலைவரே. ‘என்ன எழவு ?
> அப்பவும் “சப்பான்ல
> சாக்கிசான்
> கூப்பிட்டாக..
> அமொpக்காவுல மைக்கேல்
> சாக்சன் கூப்பிட்டாக
> ங்கற மாதிரி” இலவசமா
> டி.வி. கொடுத்தீக.. கேஸ்
> கொடுத்தீக.. நெலம்
> கொடுத்தீக.. இதையும்
> நீங்களே குடுங்கன்னு,
> அதுக்கும் இந்த
> பிச்சக்காரக் கூட்டம்
> உங்ககிட்டதான்
> கையேந்தி நிக்கும்.
> அதையும்
> குடுத்திட்டீங்கன்னா
> நீங்க யார்கிட்டயும்
> ஓட்டுக்காகக்
> கையேந்தி நிற்க
> வேண்டியதில்லை. வரிசைல
> வந்து நின்னு ஓட்ட
> மாறிமாறி உங்களுக்கே
> குத்திட்டு போயிட்டே
> இருப்பாங்க. ஐடியா
> நல்லா இருக்குங்களா
> தலைவரே? மனசுல
> வெச்சுக்குங்க 2011 ல
> கூட்டணி சம்பந்தமா
> காங்கிரஸ் கூட ஏதாவது
> பிரச்சனை வரலாம்
> அப்படி வந்தா தேர்தல்
> அதுகள
> கழட்டிவிட்டுட்டு
> தேர்தல் அறிக்கைல இத
> சேர்த்திடுங்க.
> கண்டிப்பா ஒர்க்அவுட்
> ஆகும்.
>
> எனக்கென்னமோ 2011ல இந்த
> காங்கிரஸ்காரன்
> கட்டாயம் தகராறு
> பண்ணுவான்னுதான்
> தோணுது. இப்பவே பாருங்க
> இந்த ஈ.வி.கே.எஸ்.
> இளங்கோன்னு ஒன்னு
> ஏட்டிக்குப்
> போட்டியாவே
> பேசிட்டுத் திரியுது.
> என்னடா தைரியமா பேரச்
> சொல்றானேன்னு
> பாக்கறீங்களா. அட அதனால
> என்னங்க அதென்ன
> மானநஷ்ட வழக்கா
> போடப்போகுது.
> அதெல்லாம்
> இருக்கிறவன்
> போட்டாதான் செல்லும்
> தலைவரே.
>
> கட்சி செயற்குழு,
> பொதுக்குழு
> கூட்டத்துக்கு
> போறதுக்கே பக்கத்து
> நாட்டுக்கு
> படையெடுத்து போறது
> கணக்கா பத்து பதினஞ்சு
> செட் வேட்டி சட்டை
> எடுத்துட்டு போய்
> கடைசீல திரும்பி வரும்
> போது எல்லாங் கிழிஞ்சி
> அண்டர் டிராயரோடு வர்ற
> கூட்டம்தானுங்க
> தலைவரே இவங்க.
> அவங்களுக்குத்
> தெரியும் அவங்களோட
> வெக்கம்
> மானத்தப்பத்தி, அதனால
> அப்படியெல்லாம்
> எதுவும் செய்ய
> துணியமாட்டாங்கத்
> தலைவரே. புதுசா எந்த
> வழக்குலயும் ஜாயின்ட்
> பண்ணமுடியலங்கற
> வருத்தத்துல இந்த
> சுப்பரமணிசாமி எதாவது
> முயற்சி பண்ணினா
> காங்கிரஸ்காரங்களும்
> அதப்பத்தி யோசிக்க ஒரு
> வாய்ப்பிருக்கு. ஏன்னா
> எதுவோ கெட்டா குட்டிச்
> சுவருதான்னு
> ஊருக்குள்ள ஒரு
> பேச்சிருக்குங்க
> தலைவரே.
>
> அது செரிங்க தலைவரே
> இந்த தமிழ், தமிழ்னு
> பேசிட்டுத் திரியற
> பத்துப் பதினஞ்சு
> பசங்க சேந்து மாவீரர்
> தினம்
> கொண்டாடினாங்களே
> உங்களுக்கு ஏதாச்சும்
> நியூஸ்
> வந்துச்சுங்களா?
> மன்னிச்சுக்கங்க
> தலைவரே உகாண்டால
> ஏதாச்சும் நடந்தாவே
> உங்களுக்கு நியூஸ்
> வந்துரும். உள்ளூர்ல
> நடந்தது தெரியாமயா
> இருக்கும். அதுல அவங்க
> பிரபாகரன் படத்த
> வெச்சாலோ இல்ல
> பிரிஜ;பாஸி அட்லாஸ
> வச்சாலோ இந்த
> இளங்கோவனுக்கு என்ன
> போச்சு? உலகத் தமிழினத்
> தலைவர் நீங்களே பேசாம
> இருக்கும் போது கதர்
> சட்டக்காரனுக்கென்ன
> அடிவயித்துல தீய
> வெச்சமாதிரி அப்படி
> எரியுது?
>
> தமிழ்நாட்டுல யார்
> படத்த வெக்கலாம்
> வெக்ககூடாதுனு சட்டம்
> எதாவது
> இருக்குதுங்களா
> தலைவரே? அட அப்பிடியே
> இருந்தாலும் அத
> நீங்கதானே சொல்லனும்,
> இதுகெல்லாம் எப்படி
> அதபத்தி பேசலாம்
> நீங்களே சொல்லுங்க
> தலைவரே. இதனால
> உங்களுக்குத்தானே
> கெட்ட பேரு. ஊர்ல
> எல்லாரும் என்ன
> பேசிக்கிறாங்க
> தெரியுமா?
>
> அதான் தலைவரே
> பரமசிவன் கழுத்துல
> இருந்து பாம்பு
> கருடனைப் பார்த்து
> கேட்டுச்சாம ‘கருடா
> சௌக்கியமான்னு’
> கருடனோட நிழல பாத்தாலே
> ஓடி ஒழியற பாம்பு
> பரமசிவனோட கழுத்திலே
> இருந்த ஒரே தைரியத்துல
> கருடனைப் பாத்து
> “கருடா
> சௌக்கியமான்னு” கேட்ட
> கதையா உங்களோட
> கூட்டணியில இருக்கிற
> ஒரே ஒரு
> தைரியத்துலதான்
> தமிழ்ங்கற
> பேரக்கேட்டாலோ
> இந்தியாவோட தேசிய
> விலங்கு என்னானு
> கேட்டா புலின்னு சொல்ல
> கூட பயப்படற அந்தகதர்
> கூட்டம் பிரபாகரனோட
> பேனரையே கிழிச்சுப்
> பாத்துச்சாம்.
> இளங்கோவன் பாம்பாம்
> நீங்க பரமசிவனாம்.
> இதெல்லாம் தேவைங்களா
> தலைவரே உங்களுக்கு. ஒரு
> பழுத்த
> பகுத்தறிவுவாதிய
> எதுக்கெல்லாம்
> ஒப்பிடறாங்க பாருங்க.
>
>
> உங்களுக்கு
> மறந்திருக்காது
> இருந்தாலும், திருச்சி
> செல்வேந்திரன் ஐயா
> முன்னாடி ஒரு
> கூட்டத்துல பேசுனத
> மறுபடியும் இங்க ஒரு
> தடவ சொல்ல வேண்டியது
> என் கடமை.
> “ஒரு காங்கிரஸ்
> அமைச்சருக்கு அவசரமா
> ஒன்னுக்கு
> வந்துச்சாமா. சரி
> பக்கத்து ஊருக்குப்
> போய் போய்க்கலாம்னு
> அடி பொடிகளோட பஸ்
> புடிக்க போனாராமா. அந்த
> காலத்துல பஸ்சுல ஓவர்
> லோடு ஏத்தக் கூடாது.
> அதனால கண்டக்டர் , ஐயா
> ஏற்கனவே, பஸ் புல்
> ஆயிருச்சு; இத்தன பேர
> ஏத்த முடியாது. அதனால
> அடுத்த பஸ்சுல
> வாங்கன்னு சொன்னாராம்.
> ஊடனே காங்கிரஸ்
> அமைச்சருக்கு
> வந்துச்சே கோவம். யோவ்
> நான் மினிஸ்டரு.
> என்னையே ஏத்த
> மாட்டீங்கறீயான்னு
> கண்டக்டரை நாலு ஏத்து
> ஏத்த, போனா
> போய்தொலையட்டும்னு அத
> வண்டியில ஏத்திட்டுப்
> போனாராம்.
>
> அடுத்த நாள்
> கண்டக்டருக்கு அவங்க
> ஆபீஸ்ல இருந்து
> அழைப்பு வந்துச்சாம்.
> போய் பார்த்தா… அங்க
> அவரோட மேலதிகாரி
> முன்னாடி காங்கிரசு
> அமைச்சர்
> உட்காந்திட்டு
> இருந்தாராம்.
> மேலதிகாரி ஐயா, இந்த
> ஆளா பாருங்கன்னு
> கண்டக்டரை கைகாட்ட,
> மினிஸ்டரும் ஆமா
> அவன்தான்னு அடையாளம்
> காட்டுனாராம்.
>
> உடனே மேலதிகாரி யோவ்
> நேத்து இந்த ரூட்ல போன
> நீ உன்னோட பஸ்சுல ஓவர்
> லோடு ஏத்தினியாமான்னு
> கேட்க, கண்டக்டர்
> இல்லன்னு பதில்
> சொன்னாராம். உடனே
> மினிஸ்டர் அவன்
> ஏத்தினது உண்மைன்னு
> சொன்னாராம். மேலதிகாரி,
> ஐயா அது உங்களுக்கு
> எப்படி தெரியும்னு
> கேட்டாராம். உடனே
> மினிஸ்டர் அவரு
> ஏத்திட்டு போனதே
> என்னத்தான்னு
> சொன்னாராம்.
>
> கண்டக்டர் அப்பவும்,
> இல்லவே இல்லைன்னு
> சொல்ல, சட்டுன்னு
> மினிஸ்டர் என்கிட்ட
> ஆதாரம் இருக்குன்னு
> சொன்னாராம். என்ன
> ஆதாரம்னு மேலதிகாரி
> கேட்க நேத்து நான் போன
> டிக்கெட்டு இதோ
> இருக்கு இந்தாங்கன்னு
> மேலதிகாரிக்கிட்ட
> கொடுத்தாராம்.
>
> மேலதிகாரி டிக்கெட்ட
> வாங்கிப் பாத்துட்டு,
> ஐயா இதுக்கெல்லாம்
> அவர்மேல நடவடிக்கை
> எடுக்க முடியாதுன்னு
> சொல்லி கண்டக்டர
> அனுப்பிச்சிட்டாராம்.
>
> ஏன் தெரியுமா? ஏன்னா
> அந்த டிக்கெட்டுல
> லக்கேஜ்ன்னு எழுதி
> இருந்துச்சாம். ஆக
> காங்கிரஸ்காரன
> லக்கேஜ்ன்னு
> முதல்முதலா
> கண்டுபிடிச்சது ஒரு
> கண்டக்டர் தான்யா”
> தலைவரே, இத நான் சொல்லல.
> வெளியீட்டு கழக
> செயலாளர் திருச்சி
> செல்வேந்திரன்
> சொன்னது. ஒரு
> கண்டக்டருக்கு
> தெரிஞ்ச விஷயம், பத்து
> பதினஞ்சு வாரம் டாப் 10ல
> முதலிடத்தப் பிடிச்ச
> உளியின் ஓசை மாதிரி
> உன்னதமான படம் கொடுத்த
> உங்களுக்குத் தெரியாம
> இருக்குமா? அப்புறம்
> ஏன் இன்னும் இதுகள
> தூக்கி சுமக்கறீங்க.
> அதுக்கு இந்த வீரமணி
> மாதிரி ஆளுகள கூட
> வெச்சுக்கறது எவ்வளவோ
> மேல் தலைவரே. ஏன்னா
> தேவைப்படும்போது Law Point
> எல்லாம் புடிச்சு
> கொடுப்பாரு. கூடவே
> வெச்சிருக்கிற
> நன்றிக்காக அவரு
> சந்தோசமா அண்ணா
> விருதெல்லாம்
> உங்களுக்குக்
> கொடுப்பாரு. நீங்களும்
> அதுக்குப் பதிலா
> அவருக்கு பெரியார்
> விருது குடுத்து
> கௌரவிக்கலாம்.
> குடுத்து வாங்கற
> உங்களுக்கும்
> சந்தோஷம்
> பாத்துட்டிருக்குற
> ஜனங்களுக்கும் ஒரு
> சந்தோஷம். ஆனா இந்த
> லக்கேஜுகளால யாருக்கு
> சந்தோஷம் சொல்லுங்க
> பாக்கலாம்.
>
> அப்புறம் தலைவரே இந்த
> அம்பது அறுபது பவுன்ல
> உங்களுக்கு வர்ற
> செயின் மோதிரமெல்லாம்
> கலைஞர்
> கருவூலத்துக்கே
> குடுத்துடறீங்களே
> தலைவரே. நீங்க
> உங்களுக்குன்னு
> ஒன்னாச்சு
> வெச்சுக்கக் கூடாதா?
> ஆமா அந்த கருவூலத்தோட
> வேலை என்னங்க தலைவரே.
> நீங்க அதுக்கு
> குடுக்குற
> நகையெல்லாத்தையும்
> இரண்டு இரண்டு பவுணா
> பிரிச்சு நாட்ல நகை போட
> வக்கில்லாதவன் பெத்த
> புள்ளங்களுக்கெல்லாம்
> நகைபோட்டு கல்யாணம்
> பண்ணி
> கொடுக்குறதுங்களா?
> என்னமோ போங்க தலைவரே
> உங்களுக்குன்னு நீங்க
> எதையாவது சேர்த்து
> வெச்சிக்குங்க தலைவரே!
> ஏன்னா எங்கப்பன மாதிரி
> கடைசி காலத்துல
> எதுவுமே இல்லாம
> அஞ்சுக்கும்
> பத்துக்கும் அல்லாடற
> நெலமைக்கு வந்துடக்
> கூடாதில்லங்களா?
> ஆனாலும் நீங்க ரொம்ப
> அப்பாவியா இருக்கீங்க
> தலைவரே. சரி அத விடுங்க
> நம்ம லக்கேஜ்
> பிரச்சனைக்கு வருவோம்.
> ஆக 67ல் ஆட்சிய
> பறிகொடுத்துட்டு
> அட்ரஸ் இல்லாம தொலஞ்சு
> போன இந்த லக்கேஜூகள
> ஒவ்வொரு தடவையும்
> நீங்க ஏன் தூக்கிட்டு
> அலையனும் அப்பறம் ஏன்
> முடியாம போய்
> ஆஸ்பத்திரியில
> அட்மிட் ஆகனும்.
> யோசிச்சுபாருங்க.
>
> ஏற்கனவே இந்த தமிழ்
> தேசிய கோஷ்டிகள்
> எல்லாம் உங்கள கரிச்சு
> கொட்றாங்க. இலங்கைல
> ஒன்றரை லட்சம்
> தமிழர்கள் சாகறதுக்கு
> உங்க பதவி பயம்தான்
> காரணம், நீங்க மட்டும்
> சரியா இருந்திருந்தா,
> அவங்கள
> பாதுகாத்திருக்கலாம்.
> இராஜபக்சேவோட சிங்கள
> பேரினவாதத்துக்கு
> நீங்களும் மன்மோகன்
> சிங் அரசும் துணை போறதா
> குற்றம் சாட்றாங்க.
>
> நீங்க அனுப்பின குழு
> பண்ண கூத்துல
> திருமாவளவனுக்கு
> கதாநாயக வேஷம்
> கெடைக்கும்னு பாத்தா
> கடைசீல ராஜபக்சேக்கு
> அந்த வேஷத்தைக்
> கொடுத்துட்டு திருமாவ
> காமெடி
> பீஸ்ஸாக்கிட்டீங்கன்னு
> ஒரு பேச்சு பரவலா
> இருக்கு. “திரும்பி
> வரும்போது தம்பி
> திருமாவளவா, மீசையை
> மழித்துவிட்டு வாடா
> என் கண்ணேன்னு” ஒரு
> தந்தியாவது
> அடிச்சிருக்கலாம்
> நீங்க. திரும்பி
> வந்ததுக்கப்புறம் அவர
> அடையாளமாவது தெரியாம
> இருந்திருக்கும். அதே
> நேரத்துல நீங்களும்
> “நெஞ்சில் தமிழர்தம்
> நல்வாழ்வெனும்
> முத்துச் சுமையேற்றி
> கத்து கடல் சீறிச்
> செல்கையில் குத்து
> விளக்கிங்கொன்றை
> செத்து மடிய விட்டுச்
> செல்கின்றோம் என
> நினைப்பாயா தம்பி
> திருமா எனக் கேட்டேன்.
>
>
> அதற்கு அவரும்
> மாட்டேன் தலைவா உம்மை
> மறந்தாலன்றோ
> நினைப்பதற்கு” என
> கூறிச் சென்றான். ஆனால்
> அவர் மட்டும்
> திரும்பவில்லைனு
> தேனமுதுல எழுதுன
> மாதிரி எழுதிட்டு
> நந்தி கடல் முழுக்க
> தேடியாவது, இல்லை வங்க
> கடல் முழுக்க
> சல்லடையிட்டு
> சலித்தாவது
> பிரபாகரனின் சடலத்தை
> பார்த்து கை
> குலுக்கிவிட்டுதான்
> திரும்புவான் என்
> தம்பின்னு கேப்புல
> கெடா வெட்டி
> இருக்கலாம். ஆனா
> அதுக்கெல்லாம்
> வழியில்லாம அவரு
> மீசையோட
> திரும்பிட்டாரு, என்ன
> பண்ண தலைவரே! அங்க அவரு
> பேசுன பேச்சு
> பத்தாதுன்னு
> இங்கவந்து வேற
> எழுதறாரு அத வேற நாங்க
> படிச்சி
> தொலைக்கணுமான்னு
> தமிழ் கோஷ்டி கேக்குது
> என்ன பண்றது தலைவரே.
>
> அவருக்குப் பதிலா
> நீங்க இந்த சத்தியராஜை
> அனுப்பி இருக்கலாம்.
> ஏன்னா அவரு இன்னும்
> மனோகரா
> வசனத்தையெல்லாம்
> மனப்பாடமா சொல்லறாரு
> அட கொஞ்சம் வீராவேசமா
> பேசியாவது
> காட்டியிருப்பாரில்லைங்களா
> தலைவரே. என்ன அவரு
> நெஜமாலுமே பேசிட்டா
> சிக்கல்தான் அதுனால
> அவரு செரிப்பட
> மாட்டாருன்னு நீங்க
> நெனச்சிருக்கலாம்.
> எப்படிப் பாத்தாலும்
> யார்யாரோ பண்ற
> தப்புக்கெல்லாம்
> உங்களுக்குதான்
> கெட்டபேரு வருது,
> மனசுக்கே கஷ்டமா
> இருக்குதுங்க தலைவரே.
> “ஆண்டவரே, இவர்கள் தாம்
> செய்வது என்னவென்று
> அறியாமல்
> செய்கிறார்கள்.
> அவர்களை
> மன்னித்தருளும்” ன்னு
> சொன்ன ஏசுநாதருடைய
> இன்னொரு வடிவமா
> அன்பின் உறைவிடமா
> இருக்கிற தலைவரப்
> பத்தி இப்படி எல்லாம்
> பேசலாமான்னு கேட்டா
> “ராஜபக்ஷே தாம்
> செய்வது என்னவென்று
> அறியாமல்
> செய்துவிட்டார். அவரை
> மன்னித்தருளும்
> ஆண்டவரேன்னு” கூட உங்க
> தலைவர்
> வேண்டுவாருன்னு
> சொல்றாங்க. உங்கள
> எல்லாரும் இப்படி
> பேசுறத கேக்கும்போது
> என் நெஞ்சே
> வெடிச்சிரும் போல
> இருக்குங்க தலைவரே.
> ஊங்களுக்கு கஷ்டமா
> இல்லீங்களா தலைவரே.
>
> இதுல இந்த எல்லா
> விஷயத்தையும்
> மறைக்கத்தான் நீங்க
> செம்மொழி மாநாடு
> நடத்துறீங்க. அதுவும்
> கோயமுத்தூர் பக்கம்
> சரிஞ்சு கிடக்கிற கழக
> மார்க்கெட்டை தூக்கி
> நிறுத்தத்தான் அதை
> கோயமுத்தூர்ல
> நடத்துறீங்கன்னு கூட
> உங்க மேல பழி சொல்றாங்க
> தலைவரே. தமிழ்
> வளர்ச்சியில, தமிழனோட
> நலத்துல உங்களுக்கு
> இருக்கிற அக்கறைய
> யாருமே புரிஞ்சிக்க
> மாட்டேன்றாங்க. விட்டா
> எல்.கே.ஜி. பையன்
> பக்கத்துல இருக்கிற
> பையன கிச்சுகிச்சு
> மூட்டுனாலோ இல்ல
> கிள்ளி வெச்சாலோ கூட
> இதற்கு காரணம் இந்த
> கருணாநிதி தான்னு
> கண்டன பொதுக்கூட்டம்
> போட்டாலும் போடுவாங்க
> தலைவரே கொஞ்சம் கவனமா
> இருங்க.
>
> மாநாட்டு வேலய உட்டு
> போட்டு மணிகணக்கா
> உங்களுக்கே எழுதீட்டு
> இருக்கறேன்
> மன்னிச்சுருங்க
> தலைவரே. அப்பறம்… இந்த
> மாநாட்டுல flex
> வெக்கறதுக்காக சில
> வாசகங்கள்
> எழுதியிருக்கேன்
> சரியா இருக்கானு நீங்க
> படிச்சுட்டு பதில்
> எழுதுங்க தலைவரே
>
>
>
> “ தென்னாடுடைய தலைவா
> போற்றி
>
> என்னாட்டு
> தமிழனுக்கும் இறைவா
> போற்றி
>
> இந்திய தமிழனின்
> முதல்வா போற்றி
>
>
> ஈழத் தமிழனின் ஈசனே
> போற்றி
>
> இதுமாதிரி மகத்தான
> வேலய பார்த்திட்டு
> இருக்கும்போது கூட
> உருடியா ஒரு
> வேலயாச்சும் பண்றியா
> நீ தண்டசோறு
> தண்டசோறுன்னு
> எங்கப்பா
> திட்டீட்டேதான்
> இருக்காரு தலைவரே. அணணா
> பிறந்த நாளுக்கு
> கைதிகளுக்கு விடுதலை
> கொடுக்கிற மாதிரி
> உளியின் ஓசை
> படத்துக்காக
> உங்களுக்கு நீங்களே
> விருது குடுக்கிற இந்த
> நல்ல நாள்ல்
> எங்கப்பனையும்
> மன்னிச்சுருங்க
> தலைவரே ஏன்னா பாவிகள
> மன்னிக்கிற பக்குவம்
> உங்களுக்கு
> மட்டும்தான் இருக்கு.
>
>
> இப்படிக்கு
>
> பெற்ற தகப்பனால்
> தறுதலை
> என்றழைக்கப்படும்
> நன்றி-
புதன், 31 மார்ச், 2010
கருணாநிதிக்கு ஒரு தறுதலை எழுதிய கடிதம்.


0 comments:
கருத்துரையிடுக