சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

புதன், 31 மார்ச், 2010

கருணாநிதிக்கு ஒரு தறுதலை எழுதிய கடிதம்.

கருணாநிதிக்கு ஒரு தறுதலை எழுதிய கடிதம்.

>

> Posted: 09 Jan 2010 12:52 PM PST

>

> தானைத் தலைவருக்கு,

>

> இந்த தறுதலை தமிழனின்

> தலைவணங்கிய

> வணக்கங்கள். ‘என்னடா,

> இவன் தன்னைத் தானே

> தறுதலைன்னு

> சொல்லுறானேன்னு தப்பா

> நெனச்சுக்காதீங்க

> தலைவரே

> புள்ளைகளுக்கெல்லாம்

> அப்பன் வெக்கறது

> தானுங்க பேரு. வேலை

> வெட்டி எதுக்கும்

> போகாம நீங்க குடுத்த

> வண்ணத் தொலைக்காட்சி

> பெட்டில நீங்களும்

> உங்க வாரிசுகளும்

> வகைவகையா நடத்துற

> சேனல்கள்ல படம்

> பாட்டுத்துட்டு ஊர்

> மேஞ்சுட்டு

> இருந்ததனால ஊர

> அழைக்காமலேயே

> எங்கப்பன் எனக்கு

> வெச்ச ரெண்டாவது பேரு

> தானுங்க இந்த

> தறுதலைங்கற பேரு. பேரு

> நல்லா இருக்குங்களா

> தலைவரே?

>

> என்ன பண்ணித்

> தொலைக்கிறது தலைவரே

> எங்கப்பன் அம்பானி

> மாதிரி சொத்து சேத்து

> இருந்தா எனக்கு

> அதகொடுத்துருப்பாரு.

> இல்ல உங்கள மாதிரி

> அரசியல் செல்வாக்கு

> சேத்து வெச்சிருந்தா

> வெளங்காத என்ன மாதிரி

> புள்ளைக்கு ஒரு

> பதவியவாவது தூக்கி

> கொடுத்திருப்பாரு.

> அந்தாளே ஊர்ஊராப் போயி

> வேலைதேடி கல்லு மண்னு

> சொமந்து எனக்கு

> சோறுபோட்டு “வெந்ததத்

> தின்னுட்டு விதிவந்தா

> சாகலாம்னு” இன்னைக்கு

> செல்லாக்காசா

> உக்காந்துட்டு

> இருக்காரு.

> அந்தாளுகிட்ட தறுதலை

> தண்ட சோறுங்கற பேர தவிர

> எனக்கு தூக்கிக்

> கொடுக்க ஒன்னுமில்ல.

> அதனால போனா போகுதுன்னு

> அதையே நானும்

> வாங்கிகிட்டேன்.

>

> பேரு கிடக்குது

> தலைவரே பேரு.

> நமக்கெல்லாம் சோறு

> தானே முக்கியம். அதனால

> பேசாம கிடக்கிறேன்.

> நீங்க குடுக்குற ஒரு

> ரூவா அரிசியில

> பொங்கிப்போடறதுக்கே

> எங்கப்பனுக்கு இத்தனை

> ஓப்பாளம். கேட்டா

> பருப்பு 98 ரூவா, பாலு 48

> ரூவான்னு பாட்டு

> பாடறான் அந்த மனுசன்.

> எதுத்தும் பேச முடியல.

> பேசுனா குடும்பம்

> ரெண்டாபோயிடும்.

> நமக்கென்ன தலைவரே

> நாலஞ்சு டி.வி. சேனலா

> இருக்கு. குடும்பம்

> ரெண்டானா சேனல் 16

> ஆகும்னு

> கணக்குப்போட்டு காய்

> நகத்தறதுக்கு? வீட்ட

> விட்டு வெளிய வந்தா

> சோத்துக்கே

> சிங்கியடிக்கனும்.

> மானம் ரோசம் பாத்தா

> வயித்த யாரு

> பார்க்கறதுங்கறதாலதான்

> அடங்கிப்

> போயிட்டிருக்கேன்

> தலைவரே.

>

> எல்லா அப்பனும் உங்கள

> மாதிரி இல்லாட்டியும்

> அட்லீஸ்ட் அம்பானி

> மாதியாவது சொத்து

> சேத்து வெக்கணும்னு

> ஒரு ஆடர் போடுங்க

> தலைவரே. ‘என்ன எழவு ?

> அப்பவும் “சப்பான்ல

> சாக்கிசான்

> கூப்பிட்டாக..

> அமொpக்காவுல மைக்கேல்

> சாக்சன் கூப்பிட்டாக

> ங்கற மாதிரி” இலவசமா

> டி.வி. கொடுத்தீக.. கேஸ்

> கொடுத்தீக.. நெலம்

> கொடுத்தீக.. இதையும்

> நீங்களே குடுங்கன்னு,

> அதுக்கும் இந்த

> பிச்சக்காரக் கூட்டம்

> உங்ககிட்டதான்

> கையேந்தி நிக்கும்.

> அதையும்

> குடுத்திட்டீங்கன்னா

> நீங்க யார்கிட்டயும்

> ஓட்டுக்காகக்

> கையேந்தி நிற்க

> வேண்டியதில்லை. வரிசைல

> வந்து நின்னு ஓட்ட

> மாறிமாறி உங்களுக்கே

> குத்திட்டு போயிட்டே

> இருப்பாங்க. ஐடியா

> நல்லா இருக்குங்களா

> தலைவரே? மனசுல

> வெச்சுக்குங்க 2011 ல

> கூட்டணி சம்பந்தமா

> காங்கிரஸ் கூட ஏதாவது

> பிரச்சனை வரலாம்

> அப்படி வந்தா தேர்தல்

> அதுகள

> கழட்டிவிட்டுட்டு

> தேர்தல் அறிக்கைல இத

> சேர்த்திடுங்க.

> கண்டிப்பா ஒர்க்அவுட்

> ஆகும்.

>

> எனக்கென்னமோ 2011ல இந்த

> காங்கிரஸ்காரன்

> கட்டாயம் தகராறு

> பண்ணுவான்னுதான்

> தோணுது. இப்பவே பாருங்க

> இந்த ஈ.வி.கே.எஸ்.

> இளங்கோன்னு ஒன்னு

> ஏட்டிக்குப்

> போட்டியாவே

> பேசிட்டுத் திரியுது.

> என்னடா தைரியமா பேரச்

> சொல்றானேன்னு

> பாக்கறீங்களா. அட அதனால

> என்னங்க அதென்ன

> மானநஷ்ட வழக்கா

> போடப்போகுது.

> அதெல்லாம்

> இருக்கிறவன்

> போட்டாதான் செல்லும்

> தலைவரே.

>

> கட்சி செயற்குழு,

> பொதுக்குழு

> கூட்டத்துக்கு

> போறதுக்கே பக்கத்து

> நாட்டுக்கு

> படையெடுத்து போறது

> கணக்கா பத்து பதினஞ்சு

> செட் வேட்டி சட்டை

> எடுத்துட்டு போய்

> கடைசீல திரும்பி வரும்

> போது எல்லாங் கிழிஞ்சி

> அண்டர் டிராயரோடு வர்ற

> கூட்டம்தானுங்க

> தலைவரே இவங்க.

> அவங்களுக்குத்

> தெரியும் அவங்களோட

> வெக்கம்

> மானத்தப்பத்தி, அதனால

> அப்படியெல்லாம்

> எதுவும் செய்ய

> துணியமாட்டாங்கத்

> தலைவரே. புதுசா எந்த

> வழக்குலயும் ஜாயின்ட்

> பண்ணமுடியலங்கற

> வருத்தத்துல இந்த

> சுப்பரமணிசாமி எதாவது

> முயற்சி பண்ணினா

> காங்கிரஸ்காரங்களும்

> அதப்பத்தி யோசிக்க ஒரு

> வாய்ப்பிருக்கு. ஏன்னா

> எதுவோ கெட்டா குட்டிச்

> சுவருதான்னு

> ஊருக்குள்ள ஒரு

> பேச்சிருக்குங்க

> தலைவரே.

>

> அது செரிங்க தலைவரே

> இந்த தமிழ், தமிழ்னு

> பேசிட்டுத் திரியற

> பத்துப் பதினஞ்சு

> பசங்க சேந்து மாவீரர்

> தினம்

> கொண்டாடினாங்களே

> உங்களுக்கு ஏதாச்சும்

> நியூஸ்

> வந்துச்சுங்களா?

> மன்னிச்சுக்கங்க

> தலைவரே உகாண்டால

> ஏதாச்சும் நடந்தாவே

> உங்களுக்கு நியூஸ்

> வந்துரும். உள்ளூர்ல

> நடந்தது தெரியாமயா

> இருக்கும். அதுல அவங்க

> பிரபாகரன் படத்த

> வெச்சாலோ இல்ல

> பிரிஜ;பாஸி அட்லாஸ

> வச்சாலோ இந்த

> இளங்கோவனுக்கு என்ன

> போச்சு? உலகத் தமிழினத்

> தலைவர் நீங்களே பேசாம

> இருக்கும் போது கதர்

> சட்டக்காரனுக்கென்ன

> அடிவயித்துல தீய

> வெச்சமாதிரி அப்படி

> எரியுது?

>

> தமிழ்நாட்டுல யார்

> படத்த வெக்கலாம்

> வெக்ககூடாதுனு சட்டம்

> எதாவது

> இருக்குதுங்களா

> தலைவரே? அட அப்பிடியே

> இருந்தாலும் அத

> நீங்கதானே சொல்லனும்,

> இதுகெல்லாம் எப்படி

> அதபத்தி பேசலாம்

> நீங்களே சொல்லுங்க

> தலைவரே. இதனால

> உங்களுக்குத்தானே

> கெட்ட பேரு. ஊர்ல

> எல்லாரும் என்ன

> பேசிக்கிறாங்க

> தெரியுமா?

>

> அதான் தலைவரே

> பரமசிவன் கழுத்துல

> இருந்து பாம்பு

> கருடனைப் பார்த்து

> கேட்டுச்சாம ‘கருடா

> சௌக்கியமான்னு’

> கருடனோட நிழல பாத்தாலே

> ஓடி ஒழியற பாம்பு

> பரமசிவனோட கழுத்திலே

> இருந்த ஒரே தைரியத்துல

> கருடனைப் பாத்து

> “கருடா

> சௌக்கியமான்னு” கேட்ட

> கதையா உங்களோட

> கூட்டணியில இருக்கிற

> ஒரே ஒரு

> தைரியத்துலதான்

> தமிழ்ங்கற

> பேரக்கேட்டாலோ

> இந்தியாவோட தேசிய

> விலங்கு என்னானு

> கேட்டா புலின்னு சொல்ல

> கூட பயப்படற அந்தகதர்

> கூட்டம் பிரபாகரனோட

> பேனரையே கிழிச்சுப்

> பாத்துச்சாம்.

> இளங்கோவன் பாம்பாம்

> நீங்க பரமசிவனாம்.

> இதெல்லாம் தேவைங்களா

> தலைவரே உங்களுக்கு. ஒரு

> பழுத்த

> பகுத்தறிவுவாதிய

> எதுக்கெல்லாம்

> ஒப்பிடறாங்க பாருங்க.

>

>

> உங்களுக்கு

> மறந்திருக்காது

> இருந்தாலும், திருச்சி

> செல்வேந்திரன் ஐயா

> முன்னாடி ஒரு

> கூட்டத்துல பேசுனத

> மறுபடியும் இங்க ஒரு

> தடவ சொல்ல வேண்டியது

> என் கடமை.

> “ஒரு காங்கிரஸ்

> அமைச்சருக்கு அவசரமா

> ஒன்னுக்கு

> வந்துச்சாமா. சரி

> பக்கத்து ஊருக்குப்

> போய் போய்க்கலாம்னு

> அடி பொடிகளோட பஸ்

> புடிக்க போனாராமா. அந்த

> காலத்துல பஸ்சுல ஓவர்

> லோடு ஏத்தக் கூடாது.

> அதனால கண்டக்டர் , ஐயா

> ஏற்கனவே, பஸ் புல்

> ஆயிருச்சு; இத்தன பேர

> ஏத்த முடியாது. அதனால

> அடுத்த பஸ்சுல

> வாங்கன்னு சொன்னாராம்.

> ஊடனே காங்கிரஸ்

> அமைச்சருக்கு

> வந்துச்சே கோவம். யோவ்

> நான் மினிஸ்டரு.

> என்னையே ஏத்த

> மாட்டீங்கறீயான்னு

> கண்டக்டரை நாலு ஏத்து

> ஏத்த, போனா

> போய்தொலையட்டும்னு அத

> வண்டியில ஏத்திட்டுப்

> போனாராம்.

>

> அடுத்த நாள்

> கண்டக்டருக்கு அவங்க

> ஆபீஸ்ல இருந்து

> அழைப்பு வந்துச்சாம்.

> போய் பார்த்தா… அங்க

> அவரோட மேலதிகாரி

> முன்னாடி காங்கிரசு

> அமைச்சர்

> உட்காந்திட்டு

> இருந்தாராம்.

> மேலதிகாரி ஐயா, இந்த

> ஆளா பாருங்கன்னு

> கண்டக்டரை கைகாட்ட,

> மினிஸ்டரும் ஆமா

> அவன்தான்னு அடையாளம்

> காட்டுனாராம்.

>

> உடனே மேலதிகாரி யோவ்

> நேத்து இந்த ரூட்ல போன

> நீ உன்னோட பஸ்சுல ஓவர்

> லோடு ஏத்தினியாமான்னு

> கேட்க, கண்டக்டர்

> இல்லன்னு பதில்

> சொன்னாராம். உடனே

> மினிஸ்டர் அவன்

> ஏத்தினது உண்மைன்னு

> சொன்னாராம். மேலதிகாரி,

> ஐயா அது உங்களுக்கு

> எப்படி தெரியும்னு

> கேட்டாராம். உடனே

> மினிஸ்டர் அவரு

> ஏத்திட்டு போனதே

> என்னத்தான்னு

> சொன்னாராம்.

>

> கண்டக்டர் அப்பவும்,

> இல்லவே இல்லைன்னு

> சொல்ல, சட்டுன்னு

> மினிஸ்டர் என்கிட்ட

> ஆதாரம் இருக்குன்னு

> சொன்னாராம். என்ன

> ஆதாரம்னு மேலதிகாரி

> கேட்க நேத்து நான் போன

> டிக்கெட்டு இதோ

> இருக்கு இந்தாங்கன்னு

> மேலதிகாரிக்கிட்ட

> கொடுத்தாராம்.

>

> மேலதிகாரி டிக்கெட்ட

> வாங்கிப் பாத்துட்டு,

> ஐயா இதுக்கெல்லாம்

> அவர்மேல நடவடிக்கை

> எடுக்க முடியாதுன்னு

> சொல்லி கண்டக்டர

> அனுப்பிச்சிட்டாராம்.

>

> ஏன் தெரியுமா? ஏன்னா

> அந்த டிக்கெட்டுல

> லக்கேஜ்ன்னு எழுதி

> இருந்துச்சாம். ஆக

> காங்கிரஸ்காரன

> லக்கேஜ்ன்னு

> முதல்முதலா

> கண்டுபிடிச்சது ஒரு

> கண்டக்டர் தான்யா”

> தலைவரே, இத நான் சொல்லல.

> வெளியீட்டு கழக

> செயலாளர் திருச்சி

> செல்வேந்திரன்

> சொன்னது. ஒரு

> கண்டக்டருக்கு

> தெரிஞ்ச விஷயம், பத்து

> பதினஞ்சு வாரம் டாப் 10ல

> முதலிடத்தப் பிடிச்ச

> உளியின் ஓசை மாதிரி

> உன்னதமான படம் கொடுத்த

> உங்களுக்குத் தெரியாம

> இருக்குமா? அப்புறம்

> ஏன் இன்னும் இதுகள

> தூக்கி சுமக்கறீங்க.

> அதுக்கு இந்த வீரமணி

> மாதிரி ஆளுகள கூட

> வெச்சுக்கறது எவ்வளவோ

> மேல் தலைவரே. ஏன்னா

> தேவைப்படும்போது Law Point

> எல்லாம் புடிச்சு

> கொடுப்பாரு. கூடவே

> வெச்சிருக்கிற

> நன்றிக்காக அவரு

> சந்தோசமா அண்ணா

> விருதெல்லாம்

> உங்களுக்குக்

> கொடுப்பாரு. நீங்களும்

> அதுக்குப் பதிலா

> அவருக்கு பெரியார்

> விருது குடுத்து

> கௌரவிக்கலாம்.

> குடுத்து வாங்கற

> உங்களுக்கும்

> சந்தோஷம்

> பாத்துட்டிருக்குற

> ஜனங்களுக்கும் ஒரு

> சந்தோஷம். ஆனா இந்த

> லக்கேஜுகளால யாருக்கு

> சந்தோஷம் சொல்லுங்க

> பாக்கலாம்.

>

> அப்புறம் தலைவரே இந்த

> அம்பது அறுபது பவுன்ல

> உங்களுக்கு வர்ற

> செயின் மோதிரமெல்லாம்

> கலைஞர்

> கருவூலத்துக்கே

> குடுத்துடறீங்களே

> தலைவரே. நீங்க

> உங்களுக்குன்னு

> ஒன்னாச்சு

> வெச்சுக்கக் கூடாதா?

> ஆமா அந்த கருவூலத்தோட

> வேலை என்னங்க தலைவரே.

> நீங்க அதுக்கு

> குடுக்குற

> நகையெல்லாத்தையும்

> இரண்டு இரண்டு பவுணா

> பிரிச்சு நாட்ல நகை போட

> வக்கில்லாதவ‌ன் பெத்த

> புள்ளங்களுக்கெல்லாம்

> நகைபோட்டு கல்யாணம்

> பண்ணி

> கொடுக்குறதுங்களா?

> என்னமோ போங்க தலைவரே

> உங்களுக்குன்னு நீங்க

> எதையாவது சேர்த்து

> வெச்சிக்குங்க தலைவரே!

> ஏன்னா எங்கப்பன மாதிரி

> கடைசி காலத்துல

> எதுவுமே இல்லாம

> அஞ்சுக்கும்

> பத்துக்கும் அல்லாடற

> நெலமைக்கு வந்துடக்

> கூடாதில்லங்களா?

> ஆனாலும் நீங்க ரொம்ப

> அப்பாவியா இருக்கீங்க

> தலைவரே. சரி அத விடுங்க

> நம்ம லக்கேஜ்

> பிரச்சனைக்கு வருவோம்.

> ஆக 67ல் ஆட்சிய

> பறிகொடுத்துட்டு

> அட்ரஸ் இல்லாம தொலஞ்சு

> போன இந்த லக்கேஜூகள

> ஒவ்வொரு தடவையும்

> நீங்க ஏன் தூக்கிட்டு

> அலையனும் அப்பறம் ஏன்

> முடியாம போய்

> ஆஸ்பத்திரியில

> அட்மிட் ஆகனும்.

> யோசிச்சுபாருங்க.

>

> ஏற்கனவே இந்த தமிழ்

> தேசிய கோஷ்டிகள்

> எல்லாம் உங்கள கரிச்சு

> கொட்றாங்க. இலங்கைல

> ஒன்றரை லட்சம்

> தமிழர்கள் சாகறதுக்கு

> உங்க பதவி பயம்தான்

> காரணம், நீங்க மட்டும்

> சரியா இருந்திருந்தா,

> அவங்கள

> பாதுகாத்திருக்கலாம்.

> இராஜபக்சேவோட சிங்கள

> பேரினவாதத்துக்கு

> நீங்களும் மன்மோகன்

> சிங் அரசும் துணை போறதா

> குற்றம் சாட்றாங்க.

>

> நீங்க அனுப்பின குழு

> பண்ண கூத்துல

> திருமாவளவனுக்கு

> கதாநாயக வேஷம்

> கெடைக்கும்னு பாத்தா

> கடைசீல ராஜபக்சேக்கு

> அந்த வேஷத்தைக்

> கொடுத்துட்டு திருமாவ

> காமெடி

> பீஸ்ஸாக்கிட்டீங்கன்னு

> ஒரு பேச்சு பரவலா

> இருக்கு. “திரும்பி

> வரும்போது தம்பி

> திருமாவளவா, மீசையை

> மழித்துவிட்டு வாடா

> என் கண்ணேன்னு” ஒரு

> தந்தியாவது

> அடிச்சிருக்கலாம்

> நீங்க. திரும்பி

> வந்ததுக்கப்புறம் அவர

> அடையாளமாவது தெரியாம

> இருந்திருக்கும். அதே

> நேரத்துல நீங்களும்

> “நெஞ்சில் தமிழர்தம்

> நல்வாழ்வெனும்

> முத்துச் சுமையேற்றி

> கத்து கடல் சீறிச்

> செல்கையில் குத்து

> விளக்கிங்கொன்றை

> செத்து மடிய விட்டுச்

> செல்கின்றோம் என

> நினைப்பாயா தம்பி

> திருமா எனக் கேட்டேன்.

>

>

> அதற்கு அவரும்

> மாட்டேன் தலைவா உம்மை

> மறந்தாலன்றோ

> நினைப்பதற்கு” என

> கூறிச் சென்றான். ஆனால்

> அவர் மட்டும்

> திரும்பவில்லைனு

> தேனமுதுல எழுதுன

> மாதிரி எழுதிட்டு

> நந்தி கடல் முழுக்க

> தேடியாவது, இல்லை வங்க

> கடல் முழுக்க

> சல்லடையிட்டு

> சலித்தாவது

> பிரபாகரனின் சடலத்தை

> பார்த்து கை

> குலுக்கிவிட்டுதான்

> திரும்புவான் என்

> தம்பின்னு கேப்புல

> கெடா வெட்டி

> இருக்கலாம். ஆனா

> அதுக்கெல்லாம்

> வழியில்லாம அவரு

> மீசையோட

> திரும்பிட்டாரு, என்ன

> பண்ண தலைவரே! அங்க அவரு

> பேசுன பேச்சு

> பத்தாதுன்னு

> இங்கவந்து வேற

> எழுதறாரு அத வேற நாங்க

> படிச்சி

> தொலைக்கணுமான்னு

> தமிழ் கோஷ்டி கேக்குது

> என்ன பண்றது தலைவரே.

>

> அவருக்குப் பதிலா

> நீங்க இந்த சத்தியராஜை

> அனுப்பி இருக்கலாம்.

> ஏன்னா அவரு இன்னும்

> மனோகரா

> வசனத்தையெல்லாம்

> மனப்பாடமா சொல்லறாரு

> அட கொஞ்சம் வீராவேசமா

> பேசியாவது

> காட்டியிருப்பாரில்லைங்களா

> தலைவரே. என்ன அவரு

> நெஜமாலுமே பேசிட்டா

> சிக்கல்தான் அதுனால

> அவரு செரிப்பட

> மாட்டாருன்னு நீங்க

> நெனச்சிருக்கலாம்.

> எப்படிப் பாத்தாலும்

> யார்யாரோ பண்ற

> தப்புக்கெல்லாம்

> உங்களுக்குதான்

> கெட்டபேரு வருது,

> மனசுக்கே கஷ்டமா

> இருக்குதுங்க தலைவரே.

> “ஆண்டவரே, இவர்கள் தாம்

> செய்வது என்னவென்று

> அறியாமல்

> செய்கிறார்கள்.

> அவர்களை

> மன்னித்தருளும்” ன்னு

> சொன்ன ஏசுநாதருடைய

> இன்னொரு வடிவமா

> அன்பின் உறைவிடமா

> இருக்கிற தலைவரப்

> பத்தி இப்படி எல்லாம்

> பேசலாமான்னு கேட்டா

> “ராஜபக்ஷே தாம்

> செய்வது என்னவென்று

> அறியாமல்

> செய்துவிட்டார். அவரை

> மன்னித்தருளும்

> ஆண்டவரேன்னு” கூட உங்க

> தலைவர்

> வேண்டுவாருன்னு

> சொல்றாங்க. உங்கள

> எல்லாரும் இப்படி

> பேசுறத கேக்கும்போது

> என் நெஞ்சே

> வெடிச்சிரும் போல

> இருக்குங்க தலைவரே.

> ஊங்களுக்கு கஷ்டமா

> இல்லீங்களா தலைவரே.

>

> இதுல இந்த எல்லா

> விஷயத்தையும்

> மறைக்கத்தான் நீங்க

> செம்மொழி மாநாடு

> நடத்துறீங்க. அதுவும்

> கோயமுத்தூர் பக்கம்

> சரிஞ்சு கிடக்கிற கழக

> மார்க்கெட்டை தூக்கி

> நிறுத்தத்தான் அதை

> கோயமுத்தூர்ல

> நடத்துறீங்கன்னு கூட

> உங்க மேல பழி சொல்றாங்க

> தலைவரே. தமிழ்

> வளர்ச்சியில, தமிழனோட

> நலத்துல உங்களுக்கு

> இருக்கிற அக்கறைய

> யாருமே புரிஞ்சிக்க

> மாட்டேன்றாங்க. விட்டா

> எல்.கே.ஜி. பையன்

> பக்கத்துல இருக்கிற

> பையன கிச்சுகிச்சு

> மூட்டுனாலோ இல்ல

> கிள்ளி வெச்சாலோ கூட

> இதற்கு காரணம் இந்த

> கருணாநிதி தான்னு

> கண்டன பொதுக்கூட்டம்

> போட்டாலும் போடுவாங்க

> தலைவரே கொஞ்சம் கவனமா

> இருங்க.

>

> மாநாட்டு வேலய உட்டு

> போட்டு மணிகணக்கா

> உங்களுக்கே எழுதீட்டு

> இருக்கறேன்

> மன்னிச்சுருங்க

> தலைவரே. அப்பறம்… இந்த

> மாநாட்டுல flex

> வெக்கறதுக்காக சில

> வாசகங்கள்

> எழுதியிருக்கேன்

> சரியா இருக்கானு நீங்க

> படிச்சுட்டு பதில்

> எழுதுங்க தலைவரே

>

>

>

> “ தென்னாடுடைய தலைவா

> போற்றி

>

> என்னாட்டு

> தமிழனுக்கும் இறைவா

> போற்றி

>

> இந்திய தமிழனின்

> முதல்வா போற்றி

>

>

> ஈழத் தமிழனின் ஈசனே

> போற்றி

>

> இதுமாதிரி மகத்தான

> வேலய பார்த்திட்டு

> இருக்கும்போது கூட

> உருடியா ஒரு

> வேலயாச்சும் பண்றியா

> நீ தண்டசோறு

> தண்டசோறுன்னு

> எங்கப்பா

> திட்டீட்டேதான்

> இருக்காரு தலைவரே. அணணா

> பிறந்த நாளுக்கு

> கைதிகளுக்கு விடுதலை

> கொடுக்கிற மாதிரி

> உளியின் ஓசை

> படத்துக்காக

> உங்களுக்கு நீங்களே

> விருது குடுக்கிற இந்த

> நல்ல நாள்ல்

> எங்கப்பனையும்

> மன்னிச்சுருங்க

> தலைவரே ஏன்னா பாவிகள

> மன்னிக்கிற பக்குவம்

> உங்களுக்கு

> மட்டும்தான் இருக்கு.

>

>

> இப்படிக்கு

>

> பெற்ற தகப்பனால்

> தறுதலை

> என்றழைக்கப்படும்

> நன்றி-

0 comments:

கருத்துரையிடுக

Pages 181234 »