நண்பர் எனக்கு இந்த கவிதையை அனுப்பினார்.
அதை உங்களுக்கும் காட்டுகிறேன்.
பல்கலைக்கழகம்
பல்கலைக்கழ்கம் – ஆம் பல்கலைக்கழகம்தான்
பலகலைகளுடன்
வெள்ளைத் தோல் பெண்களையே கண்டுகொள்ளும்
வெறி கொண்ட ஆண்களின் பார்வைக்கலை
வயசுப் பெண்களையே வழிந்து பார்க்கும்
வயதான இளசுகளின் வக்கிரக்கலை
கறுப்பைக் கண்டு கசப்படையும்
காம வெறிச் சண்டாளர்களின் காமக்கலை
கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை
எல்லோருக்கும் தெரிந்த கலை
மேலோட்டப் பேச்சோ மேதாவிப் பேச்சு
உள்ளே இருக்கு ஒண்ணரை வண்டி கப்பு
தனிமையில் தெரியும் அன்னாரின் நாடகக்கலை
வெளியில் சொல்லமுடியா
வெள்ளந்தி ஊமைகள் பல
என்றாவது நல்ல வாய்ப்பு
நமக்குக் கிட்டுமாவென்று
ஏக்கப்பெருமூச்சு எல்லையில்லாக் கவலைக்கலை
பெண்ணின்நிலை இதுவென்றால்
ஆணுக்கோ சாதி ஒற்றுமை, ஜன ஒற்றுமை
இதுவும் ஒரு கலைதானே!
வெள்ளைத் தோலும், இளமையும்,
சாதிஜனமில்லாத் தனிப்பறவை
தன்நிலமை அதோ கதிதான்!
அந்த அநாதோப் பறவையின்
மூச்சுவிட முடியா முட்டி நிற்கும் கண்ணீர்க்கலை!
நன்றி தோழர் :
எ.பி.ரம்பை
திங்கள், 9 ஆகஸ்ட், 2010
பல்கலைக்கழகம்


0 comments:
கருத்துரையிடுக