சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு...

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

சாரியை

சாரியைசாரியை என்பது தமிழில் ஒரு சொல் தானே நின்று பொருள் தராமல் பிறசொற்களோடு சேர்ந்து வரும்பொழுது மட்டும் பொருள்தரும் ஒரு வகைச் சொல் ஆகும். தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குச் சற்று எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும். எடுத்துக்காட்டுகள்:மரம் என்னும் சொல்லொடு இரண்டாம் வேற்றுமையாகிய ஐ சேரும் பொழுது இடையே அத்து என்னும் ஒரு சொல் இட வேண்டும். இந்த அத்து என்னும் சொல் சாரியை எனப்படும். எனவேமரம் + அத்து + ஐ = மரத்தைபடம் + அத்து + க்+ கு = படத்துக்கு.இந்த அத்து என்னும் சாரியை ஒரு சொல்லின் இறுதியில் மகர ஒற்று இருந்தால், அதனுடன் சேரும் வேற்றுமை உருபுக்கு முன்பு வரும் சாரியை. பிற இடங்களில் வேறு சொற்கள் சாரியையாகப் பயன்படும்பல + வற்று + ஐ = பலவற்றை (வற்று என்னும் சாரியையின் பயன்பாடு).தமிழில்பொதுவாக சாரியையாகப் பயன்படும் சொற்கள்:அக்கு, அத்து, அம்,...

புதன், 18 ஆகஸ்ட், 2010

வேற்றுமையுருபு

வேற்றுமையுருபுதமிழில் எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன. அவை,முதலாம் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமை எட்டாம் வேற்றுமை அல்லது விளி வேற்றுமை முதலாம் வேற்றுமைமுதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.(எ-டு) மரம், மனிதன், பறவை. இரண்டாம் வேற்றுமைஇரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.(எ-டு) மரத்தை, மனிதனை, பறவையை. மூன்றாம் வேற்றுமைமூன்றாம் வேற்றுமையின் உருபு 'ஆல்' ஆகும்.(எ-டு) மரத்தால், மனிதனால், பறவையால். நான்காம் வேற்றுமைநான்காம் வேற்றுமையின் உருபு 'கு' ஆகும்.(எ-டு) மரத்திற்கு, மனிதனுக்கு, பறவைக்கு. ஐந்தாம் வேற்றுமைஐந்தாம் வேற்றுமையின் உருபு 'இன்' ஆகும்.(எ-டு) மரத்தின், மனிதனின், பறவையின். ஆறாம் வேற்றுமைஆறாம் வேற்றுமையின் உருபு 'அது' ஆகும்.(எ-டு) மரத்தினுடையது, மனிதனது, பறவையினுடையது. ஏழாம் வேற்றுமைஏழாம்...

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

செம்மொழியின் தகுதிகள்

செம்மொழியின் தகுதிகள்  செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :1. தொன்மை2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை5. தாய்மைப் பண்பு6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு 1. தொன்மைசெம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.2....

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நண்பர்களே!!!தமிழகத்தில்பெயரளவில் தமிழ்என கொதிக்கின்றேன்!அடடா!தமிழரின்பெயரிலும் தமிழ் இல்லை!இதோ... தமிழில் பெயர்கள் சில உங்களுக்காக...http://www.indusladies.com/forums/indian-baby-names/51211-a.html இங்கே சொடுக்கவு...

தமிழ்மொழியின் சிறப்பு

தமிழ்மொழியின் சிறப்பு ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False strory) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.இப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே!. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை...

Pages 181234 »